கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே நட்சத்திர பொருத்தம் தசா சந்தி போன்றவற்றை பார்த்து பொருத்த வேண்டும் என்று பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள்
ஆனால் சில நேரம் நம் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விட்டது எனக்கொள்வோம் . விதியில் பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விடும்
இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர் அது நல்லதல்ல திடீர் விபத்து குடும்பத்தில் உயிர் சேதம் வரை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும் அது ஏன் அப்படி சொல்கிறோம் என்றால்
ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றது
ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அசுப பலன்கள் இருந்தாலும் குறையும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது
முக்கியமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment