Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil, top 10 astrologers in chennai,famous marriage astrologers ,famous nadi astrologers in tamilnadu,,indian astrologer ,online famous,indian astrology,,indian astrology preiions,famous indian astrologer,best indian astrologer,best indian astrologer in the world,astrologer in tamil, online indian astrologer,best indian astrologer online, tamil astrology predictions, astrological predictions based on date of birth,online astrology by date of birth,astrology reading by birth date jathakam based on date of birth,birth time horoscope, horoscope by date of birth and time, tamil astrology , Astrologer,Numerology,Astrology,Horoscopes,Tamil Astrology, Horoscope in Tamil, Tamil Jothidam,astrology predictions, astrology consultation,Future Astrology,Hindu astrology ,Indian astrology,Jadhagam,Astrologer Career Consultant,best astrologer in tamilnadu,best astrology, famous astrologer in tamilnadu,best,famous,top,good Astrologer,computer tamilnadu astrologer,numerologist,Astrology Services,Marriage matching Astrologer,Astrology experts,Most popular astrologer,Specialist,famous good best Astrologer, marriage matching astrologers, good jyotish in, genuine astrologers, best astrology in, best astrologer india, famous astrologers in, vedic astrologers,tamil jothidam in theni,tamil jothidam in madurai,tamil jothidam in nagercoil,tamil jothidam in kanyakumari,tamil jothidam in chennai,tamil jothidam in madurai,tamil jothidam in trichy,tamil jothidam in vellore,tamil jothidam in kovilpatti,tamil jothidam in chengalpattu,tamil jothidam in tirunelveli,tamil jothidam in ramnad

Saturday 28 April 2018

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள்

























ஜாதகத்தில் சந்திரன் அமையும் இடத்திற்க்கான பலன்கள் 

ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் அமர்ந்தால் .வளர்பிறை சந்திரன் முக தேஜஸும் ..தேய்பிறை சந்திரன் ஜாதகரை பிடிவாத குணமுள்ளவராகவும் வர்ணிக்கிறது ..லக்கினத்தில் சந்திரன் அசுப கிரக சேர்க்கை அமைந்தால் தலை வலி ,தலையில் புண் போன்றவை ஏற்படும் 

இரண்டம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் ஜாதகர் தனவானாக இருப்பார் .வாக்கு சாதுர்யம் உடையவராகவும் இருப்பார் .சளி தொல்லை இந்த ஜாதகருக்கு சற்று அதிகமாக இருக்கும் 

மூன்றாம்  வீட்டில் சந்திரன் அமர்ந்தால் இவருக்கு பின் பிறப்பது பெண் ஆகஇருந்தால் வாழ்வில் தவிர்க்க முடியாத சில துன்பங்கள் அனுபவிப்பார்கள் ..குறிப்பாக மூன்றில் சந்திரன் இளைய சகோதரிகளுக்கு 
நல்லது இல்லை.

நான்காம் வீட்டில் இருக்கின்ற சந்திரன் தாய்க்கு கெடுதியை விளைவிப்பார் ..காரகன் காரகஸ்தானத்தில் நிற்பது நல்லதில்லை என்பது ஜோதிட விதி ..மாதுர்காரகன் சந்திரன் மாதுர்ஸ்தானம் என்றழைக்கப்படும் 
நான்கில் நிற்பது தாய்க்கு கேடு 

ஐந்தாம் வீட்டில் ந்திரன்  நிற்பது ஜாதகருக்கு பெண்பிள்ளையை தரும் ..அது மட்டுமில்லாமல் பூர்வ வழி மற்றும் குல தெய்வங்களின் ஆசி ஜாதகருக்கு எப்பொழுதும் உண்டு ..

ஆறாம் வீட்டில் சந்திரன் ஜாதகர் மிக பெரிய குழப்பவாதியாகவும் தைரியம் அற்றவராகவும் இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது ..

ஏழாம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் அவருக்கு வரும் துணை அன்பானவராக இருப்பார் ஆனால் ஜாதகர் பெண் போகம் உள்ளவராகவும் .பெண்கள் விஷயத்தில் பெயர் கெட்டு போவதற்கான வாய்ப்பும் 
உள்ளது

எட்டில் சந்திரன்  ஜாதகருக்கு உடல் ரீதியாக பல சிக்கல்களை தரும் தாய்க்கோ அல்லது தாய் மாமனாருக்கோ மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ பாதிப்புகளை இந்த அமைப்பு தரலாம் ..சிறு வயதில் இவர்களில் யாரையாவது ஒரு ஆளை இழக்கலாம் அல்லது அவரை பிரிந்து வாழ்கின்ற நிலையை தரும் .

ஒன்பதாவது வீட்டில் நிற்கின்ற சந்திரன் ஜாதகருக்கு அளவு கடந்த பக்தியை தருவார் ..எதிரிகளையும் தன் இரக்க குணத்தால் நண்பர் ஆக்குவார்கள் தந்தைக்கு நல்லதில்லை ..ஜாதகர் பெண் குழந்தைக்கு தகப்பன்  ஆவர் .

பத்தில் சந்திரன் ஜாதகரை பொது வாழ்க்கையில் பிரபல படுத்த்தும் ..குரு பார்வையும் இருந்தால் இன்னும் விஷேஷம் .நல்ல மருத்துவர் , வைத்தியம் , கெமிக்கல் வேலைகளில் ஈடு படுவோர்க்கு இந்த அமைப்பு நல்லது

பதினொன்றாம் சர லக்னத்தை சேர்ந்த ஜாதகருக்கு இது  பாதக ஸ்தானம் ஆகும் இருந்தாலும் சங்கடம் இல்லை.வியாபாரமே செய்வது இவர்களுக்கு சிறப்பு.இது போன்ற கிரக அமைப்பை பெற்றவர்களில் பெரும்பாலானோர் முதலாளி அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.தீர்க்க தரிசன செயல்பாடு.கடல் கடந்து செல்லவும்,அயலூருக்கு போய் ஆதாயம் தேடவும் வாய்ப்புண்டு.ஜாதகருக்கு கால்நடை விருத்தி உண்டு.

பன்னிரண்டாம் இடத்து சந்திரன் ஜாதகர்  ஈவு  இரக்கம் அற்றவர்களாக இருப்பார்கள் ..ஓட்டை வாய்க்கு முதல் சொந்தக்காரர் .மனோ தைரியம் குறைவாக இருக்கும் ..நாலு பேர் கூடி இருக்கின்ற இடத்தில ஒருத்தரை
மட்டும் எல்லாரும் நக்கல் செய்வதற்கு ஜாதகரின் நடவடிக்க்கை இடம் கொடுக்கும்


தொடரும் 

Friday 27 April 2018

உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர் அமைவார்கள்

உன் நண்பனை காட்டு உன்னை சொல்கிறேன் என்பார்கள் ..அந்த அளவிற்கு ஒருவரின் வாழ்க்கையில் நண்பன் என்பவன் பிரதிபலிக்கிறான் .எப்படி பட்ட நண்பர்கள் நமக்கு அமைவார்கள் என்று ஜாதக ரீதியாக தெரிந்துகொள்ள முடியும் ..

ஒரு ஜாதகத்தில் நண்பனின் ஸ்தானம் என்று சொல்லப்படுவது  ஏழாம் வீடு ..இது தான் மனைவி ஸ்தானம் அதுபோல் உங்களுடன் இணைந்து தொழில் நடத்தும்  பங்காளர் போன்றவற்றை பற்றி ஏழாம் வீடும் அதன் பாவதிபதிகளையும்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது 

ஏழாம் வீட்டில் குரு அமைந்தால் ..அல்லது ஏழாம் வீட்டில் குருவின் பார்வை விழுந்தாலோ நண்பர்கள் குறைவாக தான் இருப்பார்கள் ..ஆனால் பயபக்தியான உங்களுடன் திருத்தலங்களுக்கு பிரயாணம் 
செய்யும் நண்பர்கள் அமைவார்கள் .அதுபோல் ஏழில் குரு அமைந்தால் வயது வித்தியாசம் அதிகம் 
உள்ள நண்பர்களின் சேர்க்கை அமையும் . 

ஏழாம் வீட்டில் சனி  அமைந்தால் மிக மோசமான நண்பர்களின் சேர்க்கையால் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டங்களை இழப்பீர்கள் .அதுபோல் அசுப திருஷ்டி விழுந்தால் நண்பர்கள் மூலமாக துரோகம் 
பொருள் நஷ்ட்டம் போன்றவை கூட ஏற்படலாம்.

ஏழாம் வீட்டில் சனி அமைந்து அதில் செவ்வாய் திருஷ்டி விழுந்தாலோ ..அல்லது செவ்வாய் அமர்ந்து 
சனியின் திருஷ்டி விழுந்தாலோ மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் பரம எதிரிகள் ஆவார்கள் 
செவ்வாய் தனித்து ஏழில் நின்றால் நீண்ட வருடங்கள் கழித்து நெருங்கிய நண்பனை பார்க்கும் சூழல் 
ஏற்படும் .

புதன் ஏழில் அமர்ந்தாலோ அல்லது சம்பந்த பட்டாலோ ..உங்களை குழப்புகின்ற நண்பர்களின் சேர்க்கை 
வரும் அதேநேரம் உங்களின் நண்பரின் ஊக்குவிப்பால் மேற்படிப்பை தொடர்வீர்கள் ..அதிகம் படித்த நண்பர்களை சம்பாதிப்பீர்கள் ..

ஏழில் சுக்கிரன் அமர்தல்  அல்லது சம்பந்தப்படுத்தல் பெண் தோழிகளை அதிகம் தரும் ..சனி சம்பந்தப்பட்டால் 
அது தவறான பந்தங்களுக்கு வழி வகுக்கும் ..சுக்கிரன் ஏழில் அமர்தல் நண்பியை காதலித்து மணக்கலாம் .

சூரியன் ஏழில் சம்பந்தப்பட்டால் தந்தை வழி பந்தத்தில் ஒரு சிறந்த நண்பர் அமையலாம் ..அரசியல் நடவடிக்கையை  செய்கின்ற நண்பர்கள் அமையும் ..சந்திரன்  ஏழில் சம்பந்தப்பட்டால் தாய்  வழி பந்தத்தில் ஒரு சிறந்த நண்பர் அமையலாம்..

jathagam kattam palangal in tamil

tamil jathagam kattam pdf

jathagam kattam porutham in tamil

jathagam kattam palangal in tamil free

jathagam kattam from date of birth in tamil

jathagam kattam number

how to read jathagam kattam in tamil

jathagam kattam in tamil 2017

Wednesday 25 April 2018

மனைவி அமையும் திசை

















மனைவி அமையும் திசை ஒரு ஜாதகத்தின் ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதியை பொறுத்தே 
அமையும் 
********** *********** *******

ஏழாம் அதிபதி சூரியன் எனில் மனைவி  கிழக்குதிசை

சந்திரன் எனில் மனைவி தென் கிழக்கு திசை நோக்கி

செவ்வாய் எனில் மனைவி தெற்கு திசை நோக்கி அமைவாள்

புதன் எனில்-வட கிழக்கு திசை நோக்கியும்

குரு எனில்  வடக்கு நோக்கியும்

சுக்கிரன் எனில்  கிழக்கு நோக்கி அமைவது மட்டுமில்லாது உள்ளூரில் அமையவும் வாய்ப்புகள் அதிகம்

சனி எனில் மேற்கு திசை நோக்கியும் .

ராகு எனில் தென் மேற்கு திசை நோக்கியும்

கேது எனில் வட மேற்கு திசையில் இருந்து வருவாள் ஆனால் கேதுவிற்கு 7ம் இடத்தில் நிற்கும் கிரகத்தின் திசையும் ஒத்து வரும்.

குறிப்பு : திசை என்று இங்கு சொல்வது மணமகனின் பிறப்பிடத்தில் இருந்து பெண்ணின் பிறப்பிடமாக 
கொள்ளவேண்டும் 

மனைவி உறவிலா?, அன்னியத்திலா?
****************** **********************
7ம் அதிபதியோடு லக்னாதிபதியோ 10 ஆம் அதிபதியோ இணைந்திருந்தால்  உறவில்.
லக்னாதிபதி யோடு சுக்கிரன் இணைய உறவில் கெட்டி மேளத்தோடு திருமணம் நடக்கும்

4க்குடையவர் 2,7ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு பார்த்தாலும் சேர்ந்தாலும் தாய்வழி உறவில்.
4,11 க்குடையவர் சேர்ந்தாலும் பார்த்தாலும் தாய்வழி உறவில் திருமணம் நடப்பதற்க்கான சாத்தியக்கூறுகள்
அதிகம்

9 குடையவர் 2,7, ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு சேர்ந்தாலும் பார்த்தாலும்  உறவில் கெட்டிமேளம் முழங்க அத்தைவழி உறவில் மணம் முடிப்பார் ஜாதகர்

3,7க்குடையவர்கள் இணைவு,பார்வை சகோதரவழி பந்தத்தில் திருமணம் இனிதே அரங்கேறும்

7,5 இணைவு,பார்வை,பரிவர்த்தனை,புதன் 7ம் அதிபதியோடு தொடர்பு மாமன் வழியில் அமையும்.

7 ல், சனி, ராகு,கேது அன்னியத்தில் திருமணம் நடைபெறும்.ஏழில் சனி ,சுக்கிரன் ,குரு இணைவு
ஊரைவிட்டு ஓடி சென்று திருமணம் செய்வார்கள் 

Friday 20 April 2018

தாரா பலன் என்றால் என்ன தெரியுமா ?

தாரா, தாரை போன்றவைகள் என்ன வென்று முதலில் பார்ப்போம் ..இவைகள் நட்சத்திரங்களின் குறி ஈடாகவே ஜோதிட வேதம் சொல்கிறது . ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் இருக்கும் 12 ராசிகளில் எந்த  நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அவரின் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் ஆகும் , .

ஒரு ஜாதகரின்  வேலை, வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள் போன்ற நிகழ்வுகள்  துவங்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் அந்த நட்சத்திரமாவது  அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை முன் கூட்டியே
அறிவது நலம்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

1 – ஜென்ம தாரை – மனக்குழப்பம் தொழில் துவங்க நல்லது இல்லை

2 – சம்பத் தாரை – தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.

3 – விபத் தாரை – தவிர்க்க வேண்டிய நாள்..பயணங்கள் தவிர்ப்பது நல்லது



4 – ஷேம தாரை – நன்மை தரக்கூடியது என்று அறியவும்

5 – பிரத்யக் தாரை – வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும் என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது

6 – சாதக தாரை – புதிய முயற்சி, செயல்களுக்கு சாதகமானது...எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்



7 – வதை தாரை – கடுமையான தீமை தரக்கூடியது,..வாக்கு தர்க்கங்கள் தவிர்க்கவும்

8 – மைத்ர தாரை – மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்


9 – பரம மைத்ர தாரை – அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கணக்கில் கொள்ளவும்

உதாரணம் : ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி  என்று  வைத்து  கொள்ளுங்கள் அன்றைய நட்சத்திரம் பூரம் என்றிருந்தால்  அஸ்வினி முதல் பூரம் 11 நட்சத்திரம் 9ல் வகுக்க மீதி 2வரும், இது சம்பத் தாரை நன்மை தரும். இது போல கணக்கிடு பலன்களை சொல்லவேண்டும் 

Wednesday 18 April 2018

அட்சயதிரிதியை நாளில் தங்கம் வாங்குவதை விட தானம் செய்வது தான் சிறந்தது.




















அட்சய திரிதியை அன்று ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் உங்கள் தலைமுறை செல்வவளம் பெருகி வாழும் .

பழவகைகளை தானமாக அளித்தால் உயர்பதவி கிடைக்கும்.

வெயில் அலைகின்ற ஏழைகளுக்கு  வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உங்களை தேடி வரும்


அட்சய திரிதியை அன்று ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும்.

தாகம் தணிக்க தண்ணீர் கொடுத்தால் ..மோர் வழங்கினால் ...கல்வி வளர்ச்சி பெருகும்

தயிர் தானம் அளித்துவந்தால்  பாவவிமோசனம் உண்டு .

தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் உங்கள் வம்சத்தில் யாருக்கும் நேராது நேராது.

அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு பெருகும் 

அட்சய திரிதியை அன்று நம்  வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது நல்லது . இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும்.

அதுமட்டுமல்லாமல் இந்த நாள்  சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகவும் கருதப்படுகிறது . இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

Friday 13 April 2018

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:


















மேஷம் - அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால் நாம் எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது .அதுபோல் சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றால் குடும்பத்திற்கு நல்லது சுப செலவுகள் ஏற்படும் .2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றி முக்கிய முடிவுகள் எடுத்து நிறைவேற்றுவீர்கள்


ரிஷபம் - கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் - மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து தீரும் ..அனைவரிடமும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து  நடப்பது  நல்லது . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது

மிதுனம் - மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குவீர்கள் .
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் உங்கள் தாய் மாமனுக்கோ தாய்க்கோ உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மறையலாம் .பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள்.பழைய நண்பரை மீண்டும் சந்தீப்பீர்கள்


கடகம் - புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும்.சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது, வாக்குத்தர்க்கம் செய்யும் போது  நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும் அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.ஆனால் போராடி முடிப்பீர்கள்

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் குடுப்பத்தாருடன்  கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை இனி இல்லை.உடலில் ஏற்பட்ட
காயங்கள் மறையும் ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும் போன்றவை தோன்றி மறையும் . 02.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால்  பழைய கடனை தீர்ப்பீர்கள்;தீர்ப்பீர்கள்

கன்னி - உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து வீணாக பதட்ட படுவீர்கள்.வெளியில் செல்லும் போதோ வீட்டில் இருக்கும் பொழுதோ நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்பத்தில் மூத்தவர்களுடன்  ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காதீர்கள் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயோ ,தாய்வழி உறவினர்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம்

துலாம் - சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமா வதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலை கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால், வாக்கு தர்க்கங்களை தவிர்க்கவும் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும்.

விருச்சிகம் - விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்களை நீங்கள் மீண்டும் சந்திக்கலாம் . சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் சித்தர் பீடமுள்ள திருத்தலங்களுக்கு செல்வீர்கள் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். பணம் வரவில்  இழுபறி நிலை வந்து மறையும்

தனுசு - மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் கை கூடி வரும் . சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் பணம் வருகை கூடும் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகச் செல்வதால், நகைகளை கையாள்வதில் கவனம் தேவை.தன்னிச்சையாக முடிவுகள் தற்போது எடுக்கவேண்டாம்

மகரம் - உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது உங்களுக்கு நலம் சேர்க்கும்

கும்பம் - அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், பழைய கடனை கொடுத்து முடிப்பீர்கள் .சொந்த ஊருக்கு செல்வீர்கள் ..வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீட்டிற்கு செல்லலாம்  சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பின்னர் சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால்,  முடங்கிக் கிடந்த வேலைகள் சீக்கிரம் சீக்கிரமாக முடியும்

மீனம் - பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் உங்களுடைய பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் தங்களின் குடும்ப செலவுகளும் அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள் .சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், பெரிய காரியங்களில் தற்போது இறங்கி விடாதீர்கள்.நண்பர்கள் சவகாசம் தற்போது குறைப்பது நல்லது.  02.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், மற்றும் எலக்ட்ரிகல் சாதனங்கள் வாங்குவீர்கள்.ஒரு நெடுந்தூர பயணம் செய்வீர்கள்

பொது பரிகாரம் 

ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் வணங்குவது 
சனீஸ்வரர் ஆலயங்களுக்கு எல்லா சனிக்கிழமையும் சென்று வருவது 
எல்லா சனி அன்றும் நவ கிரகங்களை வணங்குவது 
ஏகாதசி விரதம் இருப்பது ..
பறவைகளுக்கு வீட்டின் தெற்கில் வைத்து தானியங்கள் வழங்குதல் 

ஜோதிடர் :  ராகவ் 


Tuesday 10 April 2018

நவகிரகங்களுக்கான காயத்திரி மந்திரம்

















காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்..
நவகிரகங்களுக்கான காயத்திரி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

சூரிய காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

புத காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

குரு காயத்ரி

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

சுக்ர காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

நவகிரஹ சாந்தி ஸ்லோகம்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ

Monday 9 April 2018

ஆறு மற்றும் எட்டாம் பாவமும் நோயும் | 6&8 Place horoscope |

ஜோதிடத்தில் 6 மற்றும் 8 ம்  பாவங்கள் நோய் தரும் பாவங்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது .இதில் 6 பாவம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் நோய் ..இதில் எட்டாம் பாவம் பரம்பரை மற்றும் பூர்வ
ஜென்ம பாவத்தால் வரும் நோய் என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றது

6ம் பாவமும் நோயும் 

6ம் பாவம் எப்படி பாதிக்கப்பட்டால் நோய் வருகிறதென்றால் ..லக்கினத்தை விட ஆறு பலம் கூடினால் ஜாதகருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது ..அதிலும் ஜாதகருக்கு ஆறாம் அதிபதியின் திசை நடக்கும் பட்சத்தில் நோயின் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

சுப பார்வை ஆறாம் அதிபதியின் மேல் விழுந்தால் ..குறிப்பாக குருவின் ஏழாம் பார்வை விஷேசம் கண்டிப்பாக தெய்வ அருளால் நோய் தீரும் ..இதில் குறிப்பாக 6ம்  வீட்டில் எண்ணி வரும் ஏழாம் இடம் (12ம்
வீடு ) அமரும் சுப மற்றும் அசுப கிரகத்தின் தன்மையை பொறுத்து தான் நோயின் பலத்தையும் ..அதை குணப்படுத்த எந்த மருந்தை நாட முடியும் என்பதை பற்றி கூற முடியும் .

எட்டாம் பாவமும் நோயும் 

அதுபோல் லக்கினத்தை விட எட்டு  பலம் கூடினால் ஜாதகருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது..பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவத்தால் இந்த நோய்  எப்படி வந்தது என்பதை  அறிவதற்கு எட்டாம் இடத்தில இருந்து ஒன்பதாமன் இடத்தை காண வேண்டும் அதுபோல் 8ம்  வீட்டில் எண்ணி வரும் ஏழாம் இடம் (2ம் வீடு ) அமரும் சுப மற்றும் அசுப கிரகத்தின் தன்மையை பொறுத்து தான் நோயின் பலத்தையும் ..அதை
குணப்படுத்த எந்த மருந்தை நாட முடியும் என்பதை பற்றி கூற முடியும்

இதில் 6 மற்றும் 8 லக்கின நண்பராக வரும் பொழுது நோய்கள் ஏற்பட்டாலும் அது குணமடையும் ..6 அல்லது எட்டில் குரு அமர்ந்தால் அவர் முழுமையாக பலம் இழக்கும் பொழுது தான் நோய் தொற்று ஏற்படும்

moon in 6th house remedies-moon in 6th house mother-moon in 6th house marriage
moon in 6th house in hindi-9th house in astrology in tamil-5th house in astrology tamil
mercury in 6th house-mercury in 6th house from lagna


Saturday 7 April 2018

திதிகளும் அதன் தேவதைகளும் | Thithi or tithi and god

தமிழ் வேத ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதிகளுக்கும் அவரவருகென்று தெய்வங்கள் இருக்கிறது அது தேய் பிறை திதி , வளர் பிறை திதிகளுக்கேற்றார் போல மாறும் ..மேலும் விவரம் கீழே குறிப்பிட பட்டுள்ளது 

சுக்லபட்சம்:- வளர்பிறை 

1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா

2. துவதியை – பிரம்மா

3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா

4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர்

5. பஞ்சமி – திரிபுர சுந்தரி

6. ஷஷ்டி – செவ்வாய்

7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்

8. அஷ்டமி –  காலபைரவர்9. நவமி –  சரஸ்வதி

10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்

11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12. துவாதசி – மகா விஷ்ணு

13. திரயோதசி – மன்மதன்

14. சதுர்த்தசி –  காளி

15. பவுர்ணமி -லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம்:- தேய் பிறை 

1. பிரதமை –  துர்க்கை

2. துவதியை – வாயு

3. திரிதியை – அக்னி

4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர்

5. பஞ்சமி – நாகதேவதை

6. ஷஷ்டி – முருகன்

7. ஸப்தமி – சூரியன்

8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை

9. நவமி –  சரஸ்வதி

10. தசமி – எமன் மற்றும் துர்கை

11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12. துவாதசி – சுக்ரன்

13. திரயோதசி – நந்தி

14. சதுர்த்தசி –  ருத்ரர்

15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி

tithi meaning in tamil- tamil death tithi calculator-tithi calculation formula-panchami tithi importance in tamil-how to give thithi in tamil-good tithis-tithi hindu tithi calendar-prathamai thithi in tamil


Friday 6 April 2018

ஒவ்வொரு ஜாதகர்களுக்கு அவரவர் நட்சத்திரங்களுக்கு ஏற்றார் போல மலர்கள் உண்டு














இனி உங்கள் ஜென்ம நட்சத்திரத்தையும் அதன் மலர்களையும் பார்ப்போம்
இந்த பதிவு எதற்கென்றால் ஒவ்வொருவரும் தங்களது நட்சத்திரத்திற்கு உகந்த - யோகம் தரும் மலர்களை பூஜையில் பயன்படுத்தி க்கொள்வது நல்லது

அசுவினி - சாமந்தி பூ உகந்த மலர்

பரணி - முல்லை பூ உகந்த மலர்

கார்த்திகை - செவ்வரளி பூ உகந்த மலர்

ரோகிணி - பாரிஜாதம் பூ உகந்த மலர்

மிருகசீரிஷம் - ஜாதி மல்லி பூ உகந்த மலர்

திருவாதிரை - வில்வப்பூ பூ உகந்த மலர்

புனர்பூசம் - மரிக்கொழுந்து பூ உகந்த மலர்

பூசம் - பன்னீர்மலர் பூ உகந்த மலர்

ஆயில்யம் - செவ்வரளி பூ உகந்த மலர்

மகம் - மல்லிகை பூ உகந்த மலர்

பூரம் - தாமரை பூ உகந்த மலர்

உத்திரம் - கதம்பம் பூ உகந்த மலர்

அஸ்தம் - வெண்தாமரை பூ உகந்த மலர்

சித்திரை - மந்தாரை பூ உகந்த மலர்

சுவாதி - மஞ்சள் அரளி பூ உகந்த மலர்

விசாகம் - இருவாட்சி பூ உகந்த மலர்

அனுஷம் - செம்முல்லை பூ உகந்த மலர்

கேட்டை - பன்னீர் ரோஜா பூ உகந்த மலர்

மூலம் - வெண்சங்கு மலர் பூ உகந்த மலர்

பூராடம் - விருட்சி பூ உகந்த மலர்

உத்திராடம் - சம்பங்கி பூ உகந்த மலர்

திருவோணம் - செந்நிற ரோஜா பூ உகந்த மலர்

அவிட்டம் - செண்பகம்  உகந்த மலர்

சதயம் - நீலோற்பலம் பூ உகந்த மலர்

பூரட்டாதி - வெள்ளரளி பூ உகந்த மலர்

உத்திரட்டாதி - நந்தியாவர்த்தம் உகந்த மலர்

ரேவதி - செம்பருத்தி.உகந்த மலர்

நன்றி : ஜோதிட சக்கிரம் ( தமிழ் ஜோதிட இணையம் )

வீட்டில் எல்லாரும் அமர்ந்து செய்யக்கூடிய மிக எளிமையான ஒரு தியான முறை


















நம் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் திண்ணை அருகிலோ தீபம் ஏற்றுவது ஒவ்வொரு இந்துக்களின் வீட்டிலும் நடைமுறையில் உள்ளது அந்த தீப ஒளியை ஒரு பதினைந்து நிமிடம் பார்பதினால்
நம் மன ரீதியாக உடல் ரீதியாக ஒரு தியானம் செய்கின்ற பலனை அடையலாம்

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியாய் நம் மனம் சிதற விடாமல் அதை மனதை ஒருநிலை படுத்தி பார்க்க வேண்டும் .

அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் இது மிகவும் நல்லது. கிட்ட பார்வை மற்றும்
தூர பார்வை ,கண் எரிச்சல் போன்றவை நாளடைவில் நம்மை விட்டு நீங்கி நம் கண்களுக்கு குளிர்ச்சியும்
மனம் மற்றும் உடலுக்கு புது தெம்பையும் இது கொடுக்கின்றது

நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை கீழே விவரித்துள்ளேன்

பலன்கள்

1.மனக் கவலை காணாமல் போகும்

2.முடிவு எடுக்கும் திறன் மனதிற்கு தானாகவே ஏற்படும்

3.கண்கள் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் எப்பொழுதும் இதை செய்து வந்தால் புத்தம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகளை அடக்குகின்ற மனோ பலம் நமக்கு கிடைக்கும்

6.ஒரு புதிய மனிதராய் நீங்கள் உலா வரலாம்

7.ஒற்றைத்தலைவலி இருந்தால் நாளடைவில் அது சரியாகும்

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனும் முகத்திற்கு பொலிவும் கிடைக்கும்

Article by jothisha chakram 

Wednesday 4 April 2018

வீட்டில் எந்த வகையான விளக்கை ஏற்றினால் என்ன பலன்?













வீட்டில் விளக்கேற்றுவது என்பது நம்முடைய சம்பிரதாயத்திற்காக நாம் செய்யும் ஒரு விஷயம் இல்லை.

விளக்கேற்றுவதற்கு பின் ஆன்மிக ரீதியாக பல அற்புதமான விஷயங்கள் அடங்கி உள்ளது. 

அதேபோல் விளக்கில் பல விதம் இருந்தாலும், ஒவ்வொரு விதமான விளக்கை ஏற்றுவதால் நாம் ஒவ்வொரு விதமான பலனை அடைய முடியும்.

இந்த பகுதியில் எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வெள்ளி விளக்கு :

வெள்ளி விளக்கை கொண்டு வீட்டில் தீபம் ஏற்றினால் திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேரும்.

வெண்கல விளக்கு :

வெண்கல விளக்கை கொண்டு தீபம் ஏற்றுவதால் நோய்கள் விலகி ஆரோக்கியம் சீராகும்.

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு :

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு கொண்டு தீபம் ஏற்றுவதால் வீட்டில் உள்ள பீடை விலகி சந்தோஷம் பெருகும்.

இரும்பு விளக்கு :

இரும்பு விளக்கால் தீபம் ஏற்றுவதால் சனி பகவானால் உண்டான தோஷங்கள் விலகும்.

பஞ்ச லோக விளக்கு :

பஞ்ச லோக விளக்கை கொண்டு தீபம் ஏற்றுவதால் துர்சக்திகள் விலகி தெய்வ சக்திகள் குடி கொள்ளும்.

தொழில் அறிவது எப்படி ?














உங்கள் 10 அதிபதிக்கு திரிகோணத்தில் அல்லது சப்தமத்தில் அல்லது முன்/பின் இருக்கும் கிரகத்தின் காரகத்தின் தொழிலையே ஜாதகர் செய்வார். 

ஒருவேளை 10 அதிபதி வக்கிரம் எனில், அவருக்கு பல தொழில் வாய்ப்பு அதிகம். மேலும் 10 அதிபதியை பின் ராசி கட்டத்தில்  நகர்த்தி, மேற்கண்ட முறைப்படி பலன் காண வேண்டும்.   

கிரகங்களும் தொழில்களும்
===============================

சூரியன்: பொன், வணிகம், மருந்துப் பொருட்கள், கம்பளி ஆடைகள், ஐ.ஏ.எஸ். - ஐ.எஃப்.எஸ். ஆட்சிபணி, காவல் துறை, ராணுவம், அரசாட்சி, மருத்துவம் போன்றவற்றுக்கு சூரியனே காரகத்துவம் பெறுகிறார். சூரியன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.

சந்திரன்: விவசாயம், மீன் பிடித்தல், பால் வியாபாரம், முத்துக்குளித்தல், கப்பல் கட்டும் துறை, கடற்பயணம் செய்தல், உப்பு காய்ச்சுதல், ஆலைத் தொழில், ஜவுளி வியாபாரம் செய்தல். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள், இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.

செவ்வாய்: காவல் துறை, ராணுவம், பாதுகாப்புத் துறை, மருத்துவம், ஆயுதத் தளவாடத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், விளையாட்டுத் துறை, லேத் பட்டறை, நெருப்பினால் உண்டாகும் தொழில்கள், பொறியியல் துறைகளிலும் தொழில் அமையும். ரியல் எஸ்டேட், விவசாயம், டிரைவர், பைலட், கேட்டரிங் ஆகியவற்றின் மூலம் பொருள் தேடினால் நல்ல லாபம் பெறுவார்கள்.

புதன்: வியாபாரம், கணிதம், ஸ்டேஷனரி, பத்திரிகைத் துறை, அச்சுக்கூடம், ஆசிரியப் பணி, ஜோதிடத் துறை, எழுத்துத் துறை, கவிதை, நாவல் இயற்றுதல், எழுத்தர் பணி, கணக்குப் பிள்ளை, வாக்குத் தொழில், தகவல் தொடர்பு துறை, விளம்பரம், பேச்சாற்றல், ஷேர் மார்க்கெட், கான்ட்ராக்ட் ஏஜென்சி, கூட்டுறவு நிறுவனங்கள். புதன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.வித்யாதரன்


குரு: பொருளாதாரம், வக்கீல், நீதிபதி, தங்க நகை வியாபாரம், வங்கித் துறை, அறக்கட்டளை நிறுவுதல், தர்மகர்த்தா, ஆசிரியர், வேதங்களை உச்சரித்தல், வைதீகம், ஆலயப் பணிகள், தர்ம சத்திரம் கட்டுதல், கோயில் நிர்வாகம், ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், அரசாங்க ஆதரவு. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.


சுக்கிரன்: ஆடல், பாடல், நாட்டியம், நாடகம், சினிமா, ஓட்டல், லாட்ஜிங், திருமண மண்டபம், டிராவல் ஏஜென்ஸி, கட்டடக்கலை, ஜவுளித் துறை, நகைக்கடை, நவரத்தின வியாபாரம், மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, அழகு சாதனப் பொருட்கள், தயாரிப்பு, வாசனை திரவியங்கள் விற்பனை. சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.


சனி: பாரம் தூக்குதல், சர்வர், சலூன், விவசாயம், ஆடு, மாடு, கோழி வெட்டும்  கசாப்புக்கடை, எள், எண்ணெய் வியாபாரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், அரசியல் ஈடுபாடு, சேவை செய்தல், தொண்டு நிறுவனம், மரவேலை, மண்பாண்டத் தொழில். சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.


ராகு: தொழில்நுட்ப அறிவு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்கள், கமிஷன் வியாபாரம், மதுபானம் தயாரித்தல், ஆகாய விமானம், பில்லி, சூனியம், மாந்திரீகம்,  வேதியியல் ரசாயனங்கள் தயாரித்தல், உரம், பூச்சி மருந்து தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம்.

கேது: மருத்துவம், ஆன்மிகம், மதப்பிரசாரம், சித்த மருந்துகள், லேகியம் தயாரிப்பு, களிம்புகள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட நல்ல லாபம் பெறலாம்.

Tuesday 3 April 2018

பித்ரு தோஷ தீர்க்க எளிமையான பரிகாரங்கள் | Pithurthosham


















இதற்கு எங்களின் பல பதிவுகளில் பித்ரு தோஷம் எப்படி உருவாகிறது என்பதை பற்றியும் அதற்க்கான பரிகாரங்களையும் எங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்..மேலும் சில எளிய பரிகார முறைகளை
உங்களுக்காக இங்கே பகிர்கிறோம்

பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்க்கண்டவற்றில்  ஏதேனும் ஒன்றை செய்துவந்தாலும் பித்ரு தோஷத்தால் கெடுபலன்கள்குறையும்.பித்ரு தோஷத்தால் ஏற்பட்ட கெடுபலன்கள் குறையும்

அமாவாசை தோறும் 5 விதமான பழங்களை பசுவுக்குக் கொடுத்து வருவது நல்லது

சுத்தமான நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டே மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்

பித்ரு தோஷம் தீர வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு காளி தேவியை தக்ஷிண காளி மந்திரம் ஜெபித்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் அம்மனின் அருளால் பித்ரு தோஷம் நீங்கும்

அமாவாசை அன்று நாட்டுக் கருவேல மரத்தடியில் வாழை இலையில் வைத்து உணவைப் படைத்து வர பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள் அதுமட்டுமல்லாமல் நம் வாழ்வில் ஏற்பட்டு வந்த இன்னல்கள் விலகும் ..
சிலர் வீட்டிற்குள் சிறு அறையில் பரிமாறி வைத்து சிறிது நேரம் ஜன்னல் கதவுகளை பூட்டி கொண்டு வெளியில் நிற்ப்பார்கள்

உணவு உண்ணும் முன்,முதல் பிடி உணவைப் பித்ருக்களுக்கு என்று எடுத்து வைத்துப் பின்னர் அதைப் பறவைகளுக்கு வைத்து விடவும்.இதை வீட்டின் மூத்த ஆண்மகன் செய்து வர வேண்டும்.அப்படி செய்துவந்தால் அந்த குடுப்பதிற்கு பிடித்திருந்த பிதுர்தோஷம் தீரும் - Article by Jothida chakram

தனி தனியே 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்....













உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9பது அல்லது 6ஆறு முறையாவது சொல்லுங்கள். இல்லை என்றால் காலையிலும் மாலையிலும் சொல்ல. வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். 🍁 🍃

அஸ்வினி  
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி   
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை   
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி 
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்  
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை  
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்   
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்   
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்  
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்   
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்   
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்   
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை   
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி   
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்  
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்   
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை   
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்   
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்   
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்   
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்   
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்   
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்  
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி   
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி  
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி  
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்.

ஓம்நமசிவாய  
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமசிவாயவே 
நன்றி

Monday 2 April 2018

பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார் | Pathagathipathi













1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, ஒரு ஜாதகத்தில் திரிகோண அதிபதி பலம் பெற்றிருந்தால்  நன்மைகள் நடக்கும் . முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும் என்கிறது ஜோதிட
சாஸ்திரம்

2. பாதகாதிபதி லக்ன தொடர்பு இல்லாமல் இருந்து , லக்னத்துக்கு மறைவு பெற்றிருந்தால்  நன்மை செய்யும் . கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு என்பார்கள்

3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருந்தால் நன்மைகள்  உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு

4. பாதகாதிபதி எப்பொழுதும் தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு

5. அதுபோல் பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கிறது

6. பாதகாதிபதி வக்கிரம் பெற கண்டிப்பாக ஜாதகருக்கு நன்மைகள்  உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு

7. பாதகாதிபதியை சனி பார்த்தால் நற்பயன்கள் நடந்தேறும் . கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு

8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு

9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் அதனால் பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.

10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் கண்டீப்பாக நல்லது நடக்கும்

11. அதுபோல் பாதகாதிபதி எப்பொழுதும் ராசியின் அதிபதியாக  வரும்போது தீமைகள் விளைவிப்பதில்லை

13. பாதகாதிபதி ராசி அதிபதியாக வந்தால் ஜாதகருக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்

குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை எப்பொழுதும் குறிப்பிட்ட ஜாதகருக்கு நன்மையே செய்யும்  ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு இல்லை என்று கூற்று உள்ளது 

Sunday 1 April 2018

சன்யாசி யோகம் என்றால் என்ன ? | 10th house | Sanniyasi yogam
















மாங்கல்ய தோஷங்களில் பல வகை உண்டு சில ஜாதகங்களில் ஏழு எட்டு போன்ற ஸ்தானங்களில்
எந்த வித தோஷங்களும் இல்லாமல் இருந்தாலும் பாக்கியஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம்
கரம்ம ஸ்தானம் போன்ற இடங்களில் ஏடாகூடமாக அமையும் கிரக அமைப்பு நிலை மற்றும்
அசுப திருஷ்ட்டிகள் ஜாதகருக்கு மாங்கல்ய தோஷத்தை உருவாக்கும்

அதில் ஓன்று தான் இந்த சன்னியாசி யோகமும் ..சிலருக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மீக நாட்டம்
ஏற்பட்டு துறவறம் மேற்கொள்ளுவார்கள் ..சிலருக்கு இல்லறவாழ்கை முறிந்து சன்னியாசம் மேற்கொள்ளுவார்கள் எப்படி ஆனாலும் களத்திர ஸ்தானம் பலம் குறையும் போது தான் ..சன்னியாச
யோகம் வேலை செய்ய ஆரம்பிக்கிறது

சன்யாசி யோகம் என்றால் என்ன ?

கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் மூன்று அல்லது  அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது 'சன்யாசி யோகம்' எனப்படும்.
.
இவ்வமைப்பில் பத்தாமதிபதி ஆட்சி பெற்றால் குடும்ப வாழ்க்கை  உண்டு...ஆனால் ஆன்மீக நாட்டம்,சமூக சேவையில் விருப்பம் என சாதகர் ஈடுபடுவார்.
.
இதே போல நான்குக்கு மேற்பட்ட கிரகங்கள் எந்த பாவத்தில் கூடினாலும் 'சன்யாசி யோகம்' வேலை செய்யும்.
.
இந்த பலனை நீங்கள் ராசி/லக்கனம் இரண்டுக்கும் சரிபார்த்துக் கொள்ளலாம்...மாபெரும் மகான்கள் சாதகங்களில் இவ்வமைப்பு இருப்பது கண்கூடு.

 
jothidam karka tamil pdf,jothidam karka pdf,jothidam karpom,jothidam padam,tamil jothidam lessons pdf-jothidam karka in tamil youtube,jothidam parpathu eppadi,tamil jothidam blogspot- thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for- marriage tamil jothidam online-tamil jothidam 2017-best jothidam in tamil language-tamil jothidam free software download-jothidam tamil books dinakaran jothidam-tamil jothidam marriage-dinamani jothidamin tamil

Copyright @ 2017 Vidwans web creations.