Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil, top 10 astrologers in chennai,famous marriage astrologers ,famous nadi astrologers in tamilnadu,,indian astrologer ,online famous,indian astrology,,indian astrology preiions,famous indian astrologer,best indian astrologer,best indian astrologer in the world,astrologer in tamil, online indian astrologer,best indian astrologer online, tamil astrology predictions, astrological predictions based on date of birth,online astrology by date of birth,astrology reading by birth date jathakam based on date of birth,birth time horoscope, horoscope by date of birth and time, tamil astrology , Astrologer,Numerology,Astrology,Horoscopes,Tamil Astrology, Horoscope in Tamil, Tamil Jothidam,astrology predictions, astrology consultation,Future Astrology,Hindu astrology ,Indian astrology,Jadhagam,Astrologer Career Consultant,best astrologer in tamilnadu,best astrology, famous astrologer in tamilnadu,best,famous,top,good Astrologer,computer tamilnadu astrologer,numerologist,Astrology Services,Marriage matching Astrologer,Astrology experts,Most popular astrologer,Specialist,famous good best Astrologer, marriage matching astrologers, good jyotish in, genuine astrologers, best astrology in, best astrologer india, famous astrologers in, vedic astrologers,tamil jothidam in theni,tamil jothidam in madurai,tamil jothidam in nagercoil,tamil jothidam in kanyakumari,tamil jothidam in chennai,tamil jothidam in madurai,tamil jothidam in trichy,tamil jothidam in vellore,tamil jothidam in kovilpatti,tamil jothidam in chengalpattu,tamil jothidam in tirunelveli,tamil jothidam in ramnad

Monday 14 November 2022

செவ்வாயின் வக்கிர நிலையால் பாதிக்கப்போகும் அந்த நான்கு ராசிகள்

செவ்வாய் தனது இயல்பான இயக்கத்துக்கு எதிர் இயக்கத்தில் இருந்தது . கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ரிஷபத்தில் நுழைத்துவிட்டார்ர். தனது வீட்டினை ரிஷப ராசியிலிருந்து வக்ரம் கொண்டு அடுத்த 45 நாட்களும், வக்ரம் நிவர்த்தி பெற்று 45 நாட்களும் பார்வையிடுகிறார்


செவ்வாயின் இந்த வக்ர நிலை 12 ராசிகளிலும் கண்டிப்பாக சில பலன்களை ஏற்படுத்தும். அதில் குறிப்பாக 

மேஷம் ,ரிஷபம் ,மிதுனம்,துலாம் ,மீனம் போன்ற ராசிகள் கவனத்துடன் இருப்பது நல்லது 

பெண்களுக்கு அடி வயிறு ,கர்ப்பபை சம்மந்தபட்ட அறுவை சிகிச்சை அதிகமாக நடக்கலாம் 

அதே நேரம் குழந்தையில்லாத தம்பதிகள் , மருத்துவ உதவியுடன் குழந்தை பெறுவதற்கு இது சிறந்த காலம்.


மேஷம் 

செவ்வாயின் இந்த வக்ர நிலை மேஷ ராசியினரின் ஆரோக்கியம் மோசமடைய  அதிக வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் சற்று அதிகம் கவனம் எடுத்துக்கொள்வது  நல்லது . உத்தியோகத்தர்களும், தொழில் சார்ந்த விஷயங்களில் வீண் பழி  கேட்க நேரிடலாம் .திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் சில  பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பணம் சார்ந்த விஷயத்தில் ரிஸ்க் எடுப்பதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.உங்களின் 

ரகசியம் உடைய வாய்ப்புள்ளது 


மீனம் 

செவ்வாயின் இந்த வக்ர நிலை மீன ராசியினருக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருசக்கர வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.


துலாம் 

செவ்வாயின் இந்த வக்ர நிலை துலாம் ராசியினருக்கு செய்யும் தொழிலில் மந்தமும், உத்தியோகத்தில் வாக்குதற்கவும் . பொதுவாக செவ்வாய் கிரகத்தின் மோசமான விளைவுகளினால்  உங்களின் வேலையில் தடைகள் உண்டாகும் வாய்ப்புகள் 

உள்ளது 


மிதுனம் 

செவ்வாயின் வக்ர நிலை மிதுன  ராசியினருக்கு தொழிலில் மந்தமும், வேலை செய்யும் இடத்திலும் ,குடும்பத்திலும் வார்த்தைகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது 

Wednesday 12 January 2022

அடுத்தவர்களின் மனைவி மீது ஆசைப்படுபவர்களுக்கு சனி அளிக்கும் தண்டனை

அடுத்தவர்களின் மனைவி மீது ஆசை படும் பெண்ணாசை பிரியர்கள் , அடுத்தவர்களின் பொன்களை ,நிலபுலன்களை வஞ்சித்து வாழ்பவர்களின்  வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும்.

மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப்  பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே. அந்தரங்க விஷயங்களில் மாட்டிய பல பிரபலங்களின் ஜாதகத்தை எடுத்து ஆராய்ந்தாலே உங்களுக்கு புரியும் இந்த தவறை அவர் பல காலமாக செய்து கொண்டிருப்பார்கள் 


ஆனால் சனியின் திசை துவக்கத்திலோ அல்லது தசா சந்தியிலோ .ஏழரை அஷ்டம சனி காலகட்டங்களில்  கையும் ,களவுமாக பிடிபடுவார்கள் 


காலம் பார்த்து தண்டிப்பார் சனி தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார் என்பது நிதர்சன உண்மை . பொய், களவு, சூது, வாது செய்பவர்களை  ஊக்குவித்து, போகாத ஊருக்கு போகச்  சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர நீதிகாரகனுக்கு நிகர் அவரே 

சத்தியம் தவறாமல் நித்தம் வலம் வருபவர்களின் மனதில் நித்திய வாசம் செய்வாள் அன்னை மகாலட்சுமி. அவள் இருந்தால் அவ்விடத்தை  திரும்பிக்கூட பார்க்கமாட்டாராம்  சனி பகவான். எனவே உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார்.


சனியின் நேசம் நமச்சிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு  செய்பவர்களை சனி பிடிப்பதில்லை. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை  சனி பகவான் நேசிப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை.

ஜோதிடரிடம் பேச இங்கே கிளிக் செய்யவும் 



Monday 10 January 2022

சனிக்கு பிடித்த இடங்களும் , மனிதர்களும் | Sani Dhosham in Tamil

 சனிக்கு பிடித்த இடங்களும் , மனிதர்களும் 

சுத்தம் இல்லாத  இடங்கள்  சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். ஒரு மனிதனின் வீடோ , மனமோ சுத்தமில்லாமல் இருக்கிறதென்றால் அங்கு சனிபகவான் நிறைந்திருக்கிறார் என்றே அர்த்தம்  அதுமட்டுமல்ல அனுதினம்  அழுகுரல் கேட்கும்  இடங்களில்  சனி பகவான் நிறைந்திருப்பார் .எடுத்து காட்டு மரணவீடு ,மது ,மாது சூது என்று இல்லற வாழ்க்கை சுகம் இல்லாத வீடுகளில் சனி ஆளுகிறார் 

தலைக்கனம் கொண்டவர்கள், அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவர்களை சரியான நேரம் பார்த்து பொறி வைத்து அசிங்கப்படுத்துவது சனி பகவானின் வழக்கம் . தவறுகள் செய்யும் பொழுது மற்ற கிரகங்களிடம் இருந்து தப்பித்து விடலாம் ஆனால் சனி பகவான் நின்று நிதானமாக செய்யவேண்டியதை அழுத்தம் திருத்தமாக  செய் செய் என்று செய்து விட்டு தான் போவார் எனவே நீதிகாரகன் ,கர்மகாரகன் என்று சனிபகவானுக்கு பெயர்கள் உண்டு 

ஈரம் ரொம்ப பிடிக்கும் உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியமாம்  . அதனால் தான் முன்னோர்கள் சொல்வார்கள் ஈரம் சொட்ட வீட்டிற்கு செல்லகூடாதென்று  , 

அசுத்தமான இடங்கள் மட்டுமல்ல குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் அலங்கோலமாக  இருப்பவர்களை கண்டாலும் அவ்வளவு தான் பிடித்து கொள்வார்  .







விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்கள் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

சனி ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருந்தால் அவர் அதிகம் கெட்ட வார்த்தை பேசுபவராகவும் ஏழாம் அல்லது எட்டாம் வீட்டில் இருந்தால் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவராகவும் இருப்பார் .சுப கிரகங்களின் பார்வை பட்டால் விதி விலக்கு உண்டு 

ஜாதகம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

ஜோதிடரிடம் நேரடியாக பேச இங்கே கிளிக் செய்யவும்  

Sunday 9 January 2022

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பொங்கல் வைக்க வேண்டிய சரியான நேரம்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பொங்கல் வைக்க வேண்டிய சரியான நேரம்


 


இந்த வருடம் தை மாதம் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.24 மணிக்கு பிறக்கிறது... அன்று சூரிய அஸ்தமனம் மாலை 6.18க்கு. இதன் காரணமாக தர்ப்பணம் பூஜை முதலானவைகளை 

அஸ்தமனத்திற்கு பிறகு செய்ய முடியாது.   ஆகையால் மறுநாள் அதாவது 15-01-2022 சனிக்கிழமை அன்று அனுஷ்டிக்க வேண்டும்...

( பல சாஸ்திர வல்லுனர்கள் தலைமையில் கூடி எடுத்த முடிவு)...

ஆகையால்.  

14-01-2022  வெள்ளி

==================

 போகிப் பண்டிகை


15-01-2022.  சனி

===============

 உத்தராயண புண்யகால தர்ப்பணம்.. (காலை 6.30 மணிக்கு மேல் சௌகர்யம்போல் செய்து கொள்ளலாம்)


அன்றே (15-01-2022) 

------------------------------------

மகர ஸங்கராந்தி பூஜை.  (9 .00 am மணிக்குள்) அல்லது (10.30 am மணிக்கு மேல்)


பொங்கல் பானை வைக்கும் நேரம்.  

காலை 7.30-8.30   (or)


 10.30 -11.30


16-01-2022 ஞாயிறு

=================


 கனுப்பொங்கல்




Sunday 16 February 2020

இதை முறை படி செய்தால் அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை அள்ளி தருவார்கள்













இதை முறை படி செய்தால் அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை அள்ளி 
தருவார்கள் 

1.  நாள்தோறும் உங்கள்  வீட்டின் முன் கோலம் போட வேண்டும்.

2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல் சிறந்தது

3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல் வேண்டும்


4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்து வருதல் .

5. தங்களது வருமானத்தில் ஒரு சதவீதமாவது சமூகப் பணிகளுக்கு செலவிடுதல்.

6. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுதல்.

7. வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கழுவியோ, மொழுகியோ சுத்தம் செய்தல் வேண்டும்.


8. வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும்.

9. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

10. ஆலய வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுதல்.

இவற்றை பின்பற்றி வந்தால் மனம் மகிழும் இனிய வாழ்க்கை அமையும்.

Saturday 15 February 2020

புதன் வக்கிரகாலங்களில் செய்யக்கூடாதவை




















புதன் வக்கிரகாலங்களில் செய்யக்கூடாதவை
புதன் பகவான் வரும் 17ஆம் தேதி திங்கட்கிழமையன்று காலை 6.23 மணிக்கு வக்ரமடைகிறார். மார்ச் 10ஆம் தேதி வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும் பின்னர் நேர்கதிக்கு திரும்புகிறது . இந்த வக்ர காலம் 23 நாட்கள் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்
புதன் வக்ரமடைந்திருக்கும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் பேசி பழக வேண்டாம்.
புதன் வக்ரம் பெற்று சஞ்சரிக்கும் காலகட்டத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது
ஆன்லைன் பரிமாற்றங்களில் எச்சரிக்கை தேவை.
முதன் முதலாக பங்குச்சந்தை முதலீடுகள், இன்சூரன்ஸ் போன்றவைகளை செய்யவேண்டாம்
லேப்டாப், செல்போன் போன்றவைகளை புதிதாக வாங்காமல் இருப்பது நல்லது
மேற்சொன்னவை பொதுப்பலன் இது அவரவர் ஜாதக கட்டத்திற்கு ஏற்றதுபோலவும் திசா பலன்களுக்கு
ஏற்றதுபோலவும் மாறும்

Friday 5 April 2019

கிரகங்கள் நீசம் பெற்றால் கீழ்க்காணும் நீசபலன்கள் இருக்கும்
















கிரக நீசங்கள்

கிரகங்கள் நீசம் பெற்றால் கீழ்க்காணும் நீசபலன்கள் இருக்கும் என்று அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நூல் குறிப்பிடுகின்றது.

சூரியன் நீசம்

சூரியன் நீசம் அடைந்தால்  உஷ்ண சம்பந்த வியாதியால் வருந்த நேரும். தந்தையின் ஆரோக்கியம் மற்றும் உறவு முறை சரிப்படாது. அறிவு ஆராய்ச்சி உள்ளவராக இருப்பர். தீயகுணம் நடத்தையுள்ளவராகவும் இருப்பர்.

சந்திரன் நீசம்

சந்திரன் நீசம் அடைந்தால்  பெற்றோர் சுகம் இழந்தவராக இருப்பர். பயந்த சுபாவமுள்ளவர். ஆரோக்கியமும் குறைந்திருக்கும் சுய நலவாதியாக இருப்பர், சீதள சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். நீரில் கண்டமும் இருக்கும். பெண்களால் பல வகையிலும் தொல்லை அனுபவிப்பவராக இருப்பர்.

செவ்வாய் நீசம் 

செவ்வாய் நீசம் அடைந்தால்  எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவது கடினம். குடும்பத்தில் கலகம், பல வித பிரச்சினைகள் நிறைந்திருக்கும். மூளை பாதிப்பும் அது சம்பந்தமான நோய்க்கும் ஆளாக நேரும். வீடு, நிலம் போன்றவை இருந்தாலும் அதனால் தொல்லைகளே இருக்கும். நன்மை இருக்காது. வசதி குறைந்திருக்கும்.

புதன் நீசம் 

புதன் நீசம் அடைந்தால்  கல்வியில் தடை இருக்கும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களுக்கு விரோதியாக இருப்பர். காம இச்சை மிகுந்தவராக இருப்பர். புத்திரர்களால் எந்த நன்மையும் பெற முடியாது. பழி பாவத்திற்கு ஆளாக நேரும்.

குரு நீசம் 

குரு நீசம் அடைந்தால் தீயவராக பழி பாவத்திற்கு அஞ்சாதவராக இருப்பர். கல்வி கற்றாலும் அதனால் பயன் பெறாதவராவர். ஆசாரம் இல்லாதவர். கரு உற்பத்தியில் சிதைவு காட்டும். புத்திரர்கள் இருப்பின் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும்.

சுக்கிரன் நீசம் 

சுக்கிரன் நீசம் அடைந்தால்  களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல், ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறைவு, பால் பசு, தாயினால் கிடைக்கக் கூடிய சுகங்கள் இன்மை, செல்வவளம் குறைதல், கால்நடைகள் நன்மை தராது இருத்தல் ஆகியன ஏற்படும்.

சனி நீசம் 

சனி நீசம் பெற்றிருந்தால் தீயகுணம் முரட்டுத்தனம் மிக்கவராக இருப்பர். பிறர் வெறுக்கும் காரியங்களைச் செய்வர். ஆரோக்கியம் குன்றி இருக்கும். கீழான பெண்களுடன் அல்லது ஊனமுற்ற பெண்களிடம் தொடர்பு கொண்டு இருப்பார். சோம்பல் மிகுந்து இருக்கும். வறுமை இருக்கும். மனைவிக்கு தோஷம் உண்டு அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவராக இருப்பர்.

ராகு நீசம் 

ராகு நீசம் பெற்றிருந்தால் எதற்கும் குதர்க்கம் பேசுபவராக இருப்பர். தர்க்கவாதம் புரிவர். எதையும் யோசித்து செய்ய மாட்டார்கள். இருந்தாலும் செய்யும் காரியங்களில் தீவிரமும், அக்கறையும் காட்டுவர். பித்தத் தொடர்பான வியாதி காட்டும். ஆயுதங்களால் தொல்லை ஏற்படும். குடும்பத்தில் வெறுப்புற நேரும்.

கேது நீசம் 

கேது நீசம் பெற்றிருந்தால் பிறரையும் தம்மைப் போல எண்ணும் சுபாவம் உடையவராக இருப்பர். ஆன்மீகத்துறையில் ஈடுபாடும் அத்துறைக்கு தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பும் சில காலம் கிட்டும். தாய்வழி உறவினருக்கு தோஷம் காட்டும். மருந்து மாந்தீரிகத்தினால் தொல்லைகளை அனுபவிக்க நேரும்.



Coming soon future articles Jothida chakram

நீச்சம் என்றால் என்ன ?

நீசம் என்றால் என்ன ?

சனி நீசம் 

சந்திரன் நீசம் 

குரு நீசபங்கம்

குரு நீசம் பரிகாரம்

நீச பரிவர்த்தனை

நீசபங்க ராஜ யோகம் பலன்கள்

Saturday 16 February 2019

ஆன்மீகத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்கள்
















1. எப்பொழுதும் கோவிலில் தெய்வங்களை நேருக்குநேர் நின்றுகொண்டு வணங்கக் கூடாது. பக்கவாட்டில் நின்று தான்  வணங்க வேண்டும்.

2. ஆலயங்களில் எவரேனும் ஒருவர்  ஏற்றியிருக்கும் தீபத்தில்  இருந்து நெருப்பு எடுத்து தீபம் ஏற்றக்கூடாது. புதிதாக நெருப்பைக் கொண்டே தீபத்தை தான் நீங்கள் ஏற்ற  வேண்டும். இல்லை என்றால் ஆலயத்தின் விளக்கில் இருந்து ஏற்றலாம்.

3. கஸ்தூரிமஞ்சள், பச்சைக் கற்பூரம், ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளிக்க வீட்டில் நல்ல சக்தி உண்டாகும் என்பது நம்பிக்கை . அதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய் கொண்டு திருஷ்டியும் கழிக்க கெட்ட சக்திகள் அகன்று நல்ல சக்தி உண்டாகும்.

4. கோவிலுக்கு செல்லும்போது கையில் ஏதேனும் ஒன்றை பூஜைக்காக எடுத்துச் செல்வது நல்லது .வெறுங்கையுடன் சென்றால் அதுபோல் வெறுங்கையுடன் திரும்ப நேரிடும்.

5. கோவிலில் அர்ச்சகர் தரும் குங்குமம், மஞ்சள், சந்தனம், விபூதி, பூ போன்ற பொருள்களை (பிரசாதங்களை) கோவிலிலேயே கொட்டி விடுவார்கள், இது நாம் தவிர்க்க வேண்டிய ஓன்று .

6. செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டினால் கெட்ட சக்திகள் வீட்டிற்க்குள் வராது என்பது நம்பிக்கை 

Monday 24 December 2018

பூமியில் வைக்கக்கூடாதவை...





















பூமியில் வைக்கக்கூடாதவை... 

சகலவிதமான விஷயங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் பூமி மாதா, குறிப்பிட்ட சில பொருள்களை நேரடியாக தன்மீது வைத்தால் அவற்றைத் தாங்கும் வல்லமை தனக்குக் கிடையாது என பகவான் ஸ்ரீமந் நாராயணரிடம் விவரித்து வேண்டியதாகப்  நம்முடைய பல பூரண நூல்கள் கூறுகின்றது .

அந்தப் பொருள்கள்... நல்முத்து, முத்துச் சிப்பி, பகவானின் பிம்பம், சிவலிங்கம், ஸ்ரீஅம்பாளின் மூர்த்தம், சங்கு, தீபம், தேவதா யந்திரங்கள், மாணிக்கம், வைரம், பூணூல், புஷ்பம், புத்தகம், துளசி இலைகள், ஜப மாலை, பூமாலைகள், கற்பூரம், தங்கம், கோரோசனை, சந்தனம், சாளக்கிராமம், சாளக்கிராமத்தை அபிஷேகித்த தீர்த்தம். இவற்றை நேரடியாக தரையில் படும்படி வைக்கக்கூடாது.

அப்படி வைக்கும் பட்சத்தில் பூமாதேவியின் கோவத்திற்கு ஆளாகி தீமைகள் நடந்தேறும் என்பது நம்பிக்கை ..பொதுவாகவே நீங்கள் திருத்தலங்களிலோ ..வீட்டின் பூஜை அறையிலோ இவற்றை தரையில் படும்
படி வைக்கமாட்டார்கள்


இனி சஞ்சலம் வேண்டாம் சந்திராஷ்ட தினங்களில்













பொதுவாக ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்  இரண்டேகால் நாளும் கெடுதல் ஆகாது. நட்சத்திர அடிப்படையில் சுப நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலகட்டம் , சந்திரன் எட்டில் இருந்தாலும் நன்மையே செய்யும் என்று பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன

அதிலும் பொதுவாக ஜாதகரின்  8-ல் சந்திரன்  சுபர்  சாரம் பெற்று, சுப கிரகங்களான குரு, சுக்கிரன் ஆகியோருடன் கூடும்போது, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்

மேலும், சந்திராஷ்டம தினங்களில் மனோகாரகனான சந்திரனை தியானித்து வழிபடுவதால், நம்முடைய மன சஞ்சலங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம். திங்கள்கிழமைகளில் சந்திரனை மனதில் இருத்தி கீழ்க்காணும் துதிப்பாடலைப் படித்து வழிபட, சகலமும் நலமாகும்..

அமிர்தத்துக்கு இருப்பிடமான சந்திரபகவானே போற்றி
ஸோமனே போற்றி 
வெள்ளை கிரணங்கள் உடையவரே போற்றி
பாற்கடலில் உருவானவரே 
ஆம்பல் பூவிடத்தில் பிரியம் கொண்டவரே
உலகங்களுக்கெல்லாம் பிரியமானவரே
ரோகிணியின் நாயகனே போற்றி போற்றி

அனுதினமும் இந்தப் பாடலைப் படித்து சந்திரனை வணங்கி வழிபடுவது சிறப்பானதாக்கும்  இதனால், நாம் வாழ்வில் தடைப்பட்டிருக்கும் நன்மை யாவும் தடையின்றி வெகுவிரைவில் நிறைவேறும். எப்போதும் சந்திர பலம் நிறைந்திருந்து நம் சங்கடங்கள் யாவும் விலகும்.

சந்திராஷ்டமம் பரிகாரங்கள்

சந்திராஷ்டமம் அன்று

சந்திராஷ்டமம் பரிகாரம்

சந்திராஷ்டம பரிகாரங்கள்

சந்திராஷ்டமம் 2018

சந்திராஷ்டம நாட்கள் 2018

சந்திராஷ்டம தினங்கள் 2018

சந்திராஷ்டமம் மந்திரம்

 
jothidam karka tamil pdf,jothidam karka pdf,jothidam karpom,jothidam padam,tamil jothidam lessons pdf-jothidam karka in tamil youtube,jothidam parpathu eppadi,tamil jothidam blogspot- thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for- marriage tamil jothidam online-tamil jothidam 2017-best jothidam in tamil language-tamil jothidam free software download-jothidam tamil books dinakaran jothidam-tamil jothidam marriage-dinamani jothidamin tamil

Copyright @ 2017 Vidwans web creations.