Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil, top 10 astrologers in chennai,famous marriage astrologers ,famous nadi astrologers in tamilnadu,,indian astrologer ,online famous,indian astrology,,indian astrology preiions,famous indian astrologer,best indian astrologer,best indian astrologer in the world,astrologer in tamil, online indian astrologer,best indian astrologer online, tamil astrology predictions, astrological predictions based on date of birth,online astrology by date of birth,astrology reading by birth date jathakam based on date of birth,birth time horoscope, horoscope by date of birth and time, tamil astrology , Astrologer,Numerology,Astrology,Horoscopes,Tamil Astrology, Horoscope in Tamil, Tamil Jothidam,astrology predictions, astrology consultation,Future Astrology,Hindu astrology ,Indian astrology,Jadhagam,Astrologer Career Consultant,best astrologer in tamilnadu,best astrology, famous astrologer in tamilnadu,best,famous,top,good Astrologer,computer tamilnadu astrologer,numerologist,Astrology Services,Marriage matching Astrologer,Astrology experts,Most popular astrologer,Specialist,famous good best Astrologer, marriage matching astrologers, good jyotish in, genuine astrologers, best astrology in, best astrologer india, famous astrologers in, vedic astrologers,tamil jothidam in theni,tamil jothidam in madurai,tamil jothidam in nagercoil,tamil jothidam in kanyakumari,tamil jothidam in chennai,tamil jothidam in madurai,tamil jothidam in trichy,tamil jothidam in vellore,tamil jothidam in kovilpatti,tamil jothidam in chengalpattu,tamil jothidam in tirunelveli,tamil jothidam in ramnad

Monday 30 October 2017

ரத்தினங்களும் அதற்கான கிரகங்களும்! navagraha stone Gemology or gemmology

ரத்தினங்களும் அதற்கான கிரகங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..ஆனால் அவற்றை ஜாதகங்களில் கிரக
நிலை படியும் அந்த கோள்களுக்கான திசை நடப்பையும் பொறுத்து ஜோதிடர்களின் அறிவுரை படி அணிவது
நல்லது
















சூரியன் - ரூபி  - தாமிரம் - ஞாயிறு

சந்திரன் -முத்து - வெள்ளி -திங்கள்

செவ்வாய் - பவழம் -தாமிரம் -செவ்வாய்

புதன் -மரகதம் -தங்கம் -புதன்

குரு -புஷ்யராகம் -தங்கம் -வியாழன்

சுக்ரன் -வைரம் -தங்கம் -வெள்ளி

சனி -நீலம் -தங்கம் -சனி

ராகு -கோமேதகம் -வெள்ளி -சனி

கேது -வைடூர்யம் -தாமிரம் -வியாழன்

ஆனால் விதி மிக வலிமையானது ஜாதகங்களில் இருக்கின்ற தோஷங்களை எளிமையான தெய்வ ப்ரீதி மூலமாக தான் தீர்க்க முடியும் என்பது அடியேனின் கருத்து ..

நவக்கிரக தல முக வரிகள் | navagraha temple tamilnadu












ஒவ்வொரு கிரகத்திற்கும் தமிழகத்தில் தலைமை இடமாக கொண்ட தலங்களின் முக வரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது வாழ்வில் ஒரு முறையேனும் அங்கு சென்று வருவது நல்லது

1) அருள் மிகு சூரியனார் கோவில்
ஆடு துறை (வழி ) திருவிடை மருதூர் -612104.தஞ்சை மாவட்டம்

2)அருள் மிகு கைலாச நாதர் கோவில்
திங்களூர் ,திருபுவனம் (ஆஞ் ) திருவையாறு -613204-தஞ்சை மாவட்டம்

3)அருள் மிகு வைத்தியநாதர் சாமி கோவில்
வைத்தீஸ்வரன் கோவில் ,சீர்காழி ,தஞ்சை மாவட்டம் -609117

4)அருள் மிகு சுவெதாரண்யேஸ்வரர் கோவில்
திருவெண்காடு ,சீர்காழி ,தஞ்சை மாவட்டம் -609114

5)அருள் மிகு ஆபத்சகாய சுவாமி கோவில்
ஆலங்குடி ,வலங்கைமான் திருவாரூர் -612801

அருள்மிகு பசுபதீஸ்வரர் கோவில்
தென்குடிதிட்டை ,பசுபதி கோவில் அஞ்சல் ,தஞ்சை மாவட்டம் -614206

6)அருள் மிகு அக்னீஸ்வரர் சுவாமி கோவில்
கஞ்சனூர் ,தஞ்சை மாவட்டம் -609804

7)அருள் மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில்
திருநள்ளாறு (அஞ்சல் ) காரை கால் வழி ,புதுவை மாநிலம் -609607

8)அருள் மிகு நாதநாத சுவாமி கோவில்
திருநாகேஸ்வரர் கும்ப கோணம் ,தஞ்சை மாவட்டம் -622204

9)அருள் மிகு நாதநாத சுவாமி கோவில்
கீழப்பெரும்பள்ளம் ,தரங்கம்பாடி வட்டம் -609313

Navagraha muka varikal in tamilnadu 

Sunday 29 October 2017

குரு திசை சரி இல்லை என்றால் பரிகாரம் ? | guru thisai parikaram





















ஒருவரின் ஜாதகத்தில் குரு சரி இல்லாத பட்சத்தில் அவருக்கு சத்ருக்களின் தொல்லை அந்த குரு திசை நடக்கும் பொழுது கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் .அதனால் அந்நேரம் சத்ருக்களின் பலன்களை குறைப்பதற்கு எளிமையான பரிகாரங்கள் மிகவும் அவசியம்.

அப்பேர்பட்டவர்களுக்கு குரு திசை நடக்கும் போது தர்ஷ்ண மூர்த்தியை கும்பிடுவதோடு நிறுத்தி விடக்கூடாது மகாவிஷ்ணு மந்திரங்கள் சொல்லுவதும் ..விஷ்ணு கோவிலுக்கு செல்வதும் மிகவும் நல்லது ..

சிலர் இந்நேரம் சத்ருக்களின் தொல்லை அதிகமாக இருந்தால் சத்ரு சம்கார பூஜை செய்யலாமா ? என்று கேட்கிறார்கள் அது தவறு சத்ரு சம்கார பூஜை பொதுவாக யுத்த காலங்களில் செய்வது

குரு திசை தொல்லை தரும் காலக்கட்டத்தில் சுதர்சன ஹோமம் செய்வது மிக நல்லது .அது போல் மஞ்சள் நிற
வஸ்திரங்களை அணியலாம் .

அந்தணர்களுக்கு தான தர்மங்கள் செய்யலாம் .பசுவை அந்தணர்களுக்கு தானம் செய்வது .மிருகங்களை துன்புறுத்தாமல் இருப்பது சிவன் , மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று தர்ஸனா மூர்த்தியை வணங்குவதும் ..அதுபோல் மகாவிஷ்ணு கோவிலுக்கு செல்வதும்
சிறந்தது ..Article by www.jothidam-tamil.com

guru thisai sani puthi- rahu thisai palangal in tamil- guru dasa guru bhukti predictions
guru thisai puthan puthi palangal- guru dasa for rishaba rasi-guru dasa palan-dasa puthi palangal in tamilguru dasa how many years

Saturday 28 October 2017

வியாபார ஸ்தலங்கள் அமைக்கும் முறை-வாஸ்து தமிழ் - tamil vasthu



















கிழக்கு பார்த்த கடை ஆனால் கடையின் உரிமை ஆளர் வட கிழக்கு அல்லது தென்கிழக்கு மூலையில் சற்று தெற்க்காக அமையலாம் .நேர் வட கிழக்கு தவிர்க்கவும் .தென்மேற்கு என்றால் பரவாயில்லை .பணப்பெட்டி 
பொதுவாக வலப்புறம் இருத்தல் நல்லது 

வடக்கு பார்த்த கடையில் உரிமை ஆளர் வடமேற்கில் அமரலாம் .தென்மேற்கு பரவாயில்லை வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு கூடவே கூடாது 

தெற்கு பார்த்த கடையானால் உரிமையாளர் தென்மேற்கில்  அமரலாம் .மேற்கு பார்த்த கடையானால் உரிமை யாளர் அதுபோல் தென்மேற்கில் அமர்வது நல்லது 

எங்குமே தரை வடக்கு கிழக்கு பார்த்து சரியாக அமைக்க வேண்டும் ..பணப்பெட்டி கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமைக்க வேண்டும் 

vastu room size in tamil language-
vastu shastra for home in tamil pdf-
vastu pariharam in tamil
pooja room vastu in tamil-
manaiyadi shastra in tamil pdf-
vasthu for north facing house in tamil
vasthu for east facing house in tamil-
vasthu adi palangal in tamil

திருநங்கைகளின் ஜாதகம் கண்டறிவது எப்படி ? - Shemale horoscope tamil
















ஒரு ஜாதகத்தில் ஷட்டவர்கத்தில் ஆண் மற்றும் பெண்  ஆகிய இருவகை கிரகங்களும் சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் என்று பழைய ஜோதிட 
நூல்கள் கூறுகின்றன . 

மேலும் ஜாதகத்தில் சந்திரன் கிரகம்  சூரியன் கிரகம்  ஆகியவை  சம பலத்தோடு இருந்தாலும் அதுபோல் புதன், சனியும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டாலும் இப்படி  விபரீதமான பாலுணர்வுள்ள குழந்தை பிறக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம் 

ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் குழந்தைகள் பிறப்பதற்கு உடல் மருத்துவ ரீதியிலும், மன மருத்துவ ரீதியிலும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஜோதிடம் அதற்கான மூல காரணம் இறைவன் வகுத்த விதி அல்லது கர்மா என்றே அடித்து கூறுகிறது. 

எனவே அப்படிப்பட்ட கிரகநிலையோடு ஒரு குழந்தை பிறந்தால் அது குழந்தையின் தவறு அல்ல. பெற்றோர்களின் கர்ம பலனாலும் குழந்தையின் முன்ஜென்ம வினையாலும் உருவானதே என்பதை சாஸ்திரம் கூறுகிறது . 

மேலும் இப்படிப்பட்ட குழந்தைகளை அல்லது மனிதர்களை வெறுப்பதோ அவமதிப்பதோ துன்புறுத்துவதோ போன்ற செயல்கள் செய்தால் கொடிய கர்மா வினை  சூழும் என்று வராகி மிகிரர் போன்ற சாஸ்திர மேதைகள் கூறுகிறார்கள். 

அதுபோல் ஜென்ம மோட்ஷம் கிடைக்க ஆண் ஆக இருந்தாலும் பெண் ஆக இருந்தாலும் மன கட்டுப்பாடு மிகவும் முக்கியம் ..இது போன்ற குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது அமைகிறது அதுபோல் அவர்களுக்கு ஜென்ம மோட்ஷம் கிடைக்கவும் எளிதில் வழி வகை செய்கிறது - Shemale or thirunangai horoscope tamil

ஒரு ஜாதகம் ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா என்று கண்டறிவது எப்படி ?-tamil jothidam online

ராசிகளில் ஒற்றை ராசிகள் இரட்டை ராசிகள் என்று இரு வகை உண்டு ..முதலில் ஜாதகத்தில் லக்கினம் கண்டுபிடித்து அது ஒற்றை ராசி லக்கினமா ? இரட்டை ராசி லக்கினமா என்பதை அறியவேண்டும்  . இதில் ஒற்றை ராசிகள் என்று அறியப்படுவது  மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகும் இந்த இராசிகளில் எதாவது ஒன்றில் சனிக்கிரகம் அமர்ந்திருந்தால் அது ஆணுக்குரிய ஜாதகம் என்றும், இரட்டை இராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அது ஒரு பெண்ணினுடைய ஜாதகம் என்றும் பல ஜோதிட 
நூல்கள் கூறுகின்றன 

அது போல் ஒரு ஜாதகர் ஜெனித்த சமயத்தில்  ஒற்றை இராசியின் பிற்பகுதி நாழிகையும், இரட்டை இராசியில் முற்பகுதி நாழிகையும் சேர்ந்திருந்தால் அது பெண் குழந்தையின் ஜாதகமாக தான் இருக்க வேண்டும் . அது ஏன் அப்படி சொல்கிறார் என்றால் இவை இரண்டின் அடிப்படையில் வருகின்ற ஹோரை சந்திரனுடையதாக இருக்கும். 

அதே போல ஒற்றை இராசியின் முற்பகுதியிலும் இரட்டை இராசியின் பிற்பகுதியிலும் சூரிய ஹோரை இருப்பதனால் அது ஆணுக்குரிய ஜாதகம் என்றும் கூறலாம் 

 மேலும் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், இராகு போன்ற கிரகங்கள் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது லக்கினத்தை பார்த்தாலும் அந்த குழந்தை பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது . சூரியன், செவ்வாய், குரு ஆகிய ஆண் கிரகங்கள் சேர்ந்தோ தனித்தனியாகவோ இரட்டை இராசியில் இருந்தாலும் கூட அது பெண் குழந்தையே ஆகும். மேலும் பெண் கிரகங்கள் சேர்ந்தோ தனித்தோ ஒற்றை இராசியில் இருந்தால் அது ஆண் குழந்தையாகும்.

இப்படி பல வழி களில் ஒரு ஜாதகம் ஆணா ? அல்லது பெண்ணா ? என்பதை தெரிந்து கொள்ளலாம்  என்பதை முடிவு செய்துவிடலாம். அது போல் ஷட் வர்க்கத்தில் ஆண் கிரகங்களின் பலம் அதிகமாக இருந்தால் ஆண் குழந்தையும் பெண்கிரகங்களின் பலம் கூடுதலாக இருந்தால் பெண் குழந்தையுமாக இருக்கும்  posted by www.jothidam-tamil.com


Wednesday 25 October 2017

ஆன்மீக பரிகாரங்கள் - தேங்காய் உடைப்பது ஏன் ? jothidar answer I

தேங்காய் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி என்று நாம் அதை ஏன் கருதுகிறோம் ? தேங்காய், எலுமிச்சைப் பழம், பூசணிக்காய் போன்றவை நம் அன்றாட விழாக்களில் இருக்கட்டும் சடங்குகளாக இருக்கட்டும் பலி கொடுக்கக்கூடிய பொருட்களாக பயன் படுத்த படுகின்றன . எப்பொழுதும் உயிருள்ள  பொருட்களை தான் 
நாம் பலி கொடுக்க முடியும் . எடுத்து காட்டாக  எலுமிச்சை கனியை புதிய வாகனத்தினுடைய சக்கரத்தில் வைத்து பலி கொடுப்பதை கண்டிருப்பீர்கள் . அதேபோல நாம் இந்த  பூசணிக்காயையும் பலி கொடுப்போம். 

வேண்டுதல்கள், நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் இதையெல்லாம் உள்வாங்கக்கூடிய சக்தி உண்டு தேங்காய்க்கு உண்டு ஆதலால் தான்  பிரம்மதூபமாக தேங்காயைப் நம் தேசத்தில் பலரும் பார்க்கிறார்கள் . சில நூல்கள் பிரம்மனுடைய அம்சம் என்று தேங்காயைச் சொல்கிறது. 

ஏனென்றால் பிரம்மனுக்கு முக்கண், அதாவது மூன்று கண் இருப்பது போல, தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருக்கிறது. பெரிய தெய்வ தோஷங்கள் பூர்வ புண்ணிய தோஷங்கள் இவை நம்மை விட்டு அகல வேண்டும் என்றால் தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியில் நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ விட்டு அதில் திரி போட்டு ஏற்றுவார்கள் இதனால் பெரிய பெரிய தோஷங்கள் நீங்கும் என்று நம்பிக்கை 

அதுபோல் தேங்காயை சபரிமலை போன்ற பெரிய கோவிகளில் உருட்டி வழி படுவார்கள்..நம் எண்ண ஓட்டங்களை  உள்வாங்குகின்ற சக்தி தேங்காய்க்கு உண்டு  நாம் என்ன நினைத்து உருட்டிக் கொண்டு போய் விடுகிறோமோ அது தான் நிறைவேறும். 

நம்முடைய இந்த நல்ல எண்ண ஓட்டங்களை நாம் அந்த தேங்காய்க்குள் திணிக்கிறோம். ஆனால் அதுபோல் மற்ற பொருட்களின் மீது  நாம் திணிக்க முடியாது. ஏனென்றால் எல்லாவற்றிற்கும்  அந்தச் சக்தி கிடையாது. தேங்காய்க்கு அந்த அபூர்வ சக்தி உள்ளது. அதன் மூலமாக அதை நாம் செய்யும் போது, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். அதனால்தான் தேங்காய் முக்கியப் பரிகார பொருளாக பல நிகழ்ச்சிகளில் இருக்கின்றது இருக்கிறது.- Article by tamil astrologer ragav

Tuesday 24 October 2017

மருத்துவ ஜோதிடம் பாகம் II - Medical astrology in tamil language













புதன் நரம்பு மண்டலத்தை ஆளுகின்ற கிரகம். அகலமான நெற்றியை பெற்றவர்களின் ஜாதகத்தில் புதன் 12ம்  வீட்டில் அமைவார்  ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சனை தருவது புதனின் நிலையே ஆகும் . அடிக்கடி கை கால்கள் மரத்துப்போவதற்குக் நரம்பியல் பிரச்சனைகளுக்கான கரணம் போன்றவை புதன்தான். 

லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் புதன் அமையப்பெற்றவர்கள் கடினமான பணிகளைச் செய்யும்போது அடிக்கடி வலது கையை உதறும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்று சில மருத்துவ ஜோதிட நூல்கள் கூறுகின்றது இனி அடுத்ததாக குருவிற்கு வருவோம்  உடலில் உள்ள கொழுப்புப் பகுதியைக் கட்டுப்படுத்துகின்ற பணியைச் குரு தான் செய்கிறது. பருமனான உடலமைப்பைப் பெற்றவர்களுக்கு ஜாதகத்தில் குருவின் நிலை வலுவானதாக இருக்க வேண்டும் . தைராய்டு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஜாதகத்தில் குரு கண்டிப்பாக வலு இழந்த நிலையிலேயே காணப்படும் . லக்னம் அல்லது 12ம் வீட்டினில் குரு வலுவிழந் தால் தைராய்டு சுரப்பிகளின்   காரணமாக குறிப்பாக பெண்களுக்கு முகம் வீங்கியிருக்கும். 

மேலும் இவர்கள் டான்சில்ஸ் பிரச்னைகளுக்கும் ஆளாவார்கள். ஆறு மற்றும் ஏழாம் வீட்டினில் குரு அமர்ந்தால் பெரிய அகலமான பாதங்களைப் பெற்றிருப்பார்கள். பொதுவாக .குரு ஜாதகத்தில் அமையும் இடத்தின் உடல் பாகம் ஜாதகருக்கு வாழ்வில் மிக முக்கியமானதாகும் . நான்கு அல்லது ஒன்பதாம் வீடுகளில் குரு அமர்ந்தால் மத்திம வயதில் முதுகுவலி பிரச்னை தந்து ஆப்ரேஷன் தரலாம் .  ஏனெனில் இவர்கள் அதிக எடையைக் குனிந்து தூக்குபவர்களாக இருப்பார்கள் அல்லது அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருப்பார்கள் . அடிக்கடி குனிந்து நிமிர வேண்டிய சூழல் உருவாகும்போது முதுகு தண்டு பாதிப்படைவது இயற்க்கை தான் 

jathagam science - Medical astrology article by tamil jothidar 

Monday 23 October 2017

ஜோதிடமும் உடல் அமைப்பும் - Medical astrology tamil

















நிச்சயமாக ஒருவரது ஜாதகத்தில் காணப்படுகின்ற தோஷங்களுக்கும், அவரது உடல்நிலைக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும் . நாம் ஜோதிட சாஸ்திரத்தில் அடிக்கடி கேள்விப்படுகின்ற  செவ்வாய் தோஷம், களத்ர தோஷம், புத்ர தோஷம், சர்ப்ப தோஷம் போன்றவற்றிற்கும் மனிதனின் உடல்நிலைக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. இந்த தோஷங்களைத் தருகின்ற கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் அவை குறிப்பிடும் பாகங்களில் மனிதனின் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் . ஜெனிடிக்ஸ் துறையில்கூட மருத்துவ ஜோதிடர்கள் பல ஆய்வுகளை செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் 

எடுத்து காட்டுக்கு ஒரே பரம்பரையைச் சேர்ந்த உருவ ஒற்றுமையை உடைய வம்சாவளியினரின் ஜாதக கட்டத்தில்  குறிப்பிட்ட ராசிகளில் ஒரே மாதிரியான கிரக அமைப்பு இருக்கும். ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் அமர்ந்திருக்கும் ராசியின் தன்மையைக் கொண்டு அவர்களது உடல் அமைப்பைப் பற்றிக்கூட அறிய முடியும். மனிதர்களின் உடலமைப்பு என்று சொல்வதை விட ‘பாடி லாங்க்வேஜ்’ என்ற, உடல் அசைவுகளை நிர்ணயிக்கும் பணியில் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சூரியன்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றது . உதாரணத்திற்கு லக்னத்திலோ அல்லது 12ம் வீட்டிலோ அமர்ந்திருக்கும் சூரியன் முகத்தில் குறிப்பாக கண்களால் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மையை உண்டாக்கும். 

2ம் வீடு அல்லது 11ம் வீட்டினில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படும்போது கைகளை நன்றாக வீசியும், இப்படி அப்படி ஆட்டியும் பேசுவார்கள். அதே போல ஆறு அல்லது நடனத்தில் சிறந்து விளங்குபவர்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ஏழாம் வீட்டில் நிச்சயம் சூரியன் சம்பந்தம் இருக்கும் . அதுபோன்று விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள் ஜாதகத்தில் சூர்யன் ஐந்தில் ஆதிக்கம் செலுத்துவார் 

மேற்கத்திய ஜோதிட முறையில் சூரியன் அமர்ந்திருக்கும் ராசி அவரவரின் ஜென்ம ராசியாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

அடுத்ததாக கிரகங்களில் சந்திரனின் அமைவிடம் மிக முக்கியமானது. மனித உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் இந்த சந்திரன். இந்தியர்கள் எதையும் உணர்வுபூர்வமாக அணுகுபவர்கள் என்பதால் இந்திய ஜோதிடத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே அவரவரின் ஜென்ம ராசியாக நிர்ணயிக்கப்படுகிறது.அசைவுகளை கட்டுப்படுத்துவதால் மேற்கத்திய நாடுகளில் சூரியன் இருப்பதை ஜென்ம ராசி ஆக்கினார்கள்  ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2 அல்லது 11ம் இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் எதிரில் உள்ளவரைத் தொட்டுப்பேசும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள்..மனம் பலம் 
குறைந்து காணப்படுவார்கள் 

லக்னத்திலும், 12ம் வீட்டிலும் சந்திரன் அமையப் பெற்றவர்கள் அடிக்கடி பல் மருத்துவரை நாடிச் செல்வார்கள். காஸ்மெட்டிக் பொருட்களால் அடிக்கடி பக்க விளைவினை சந்திக்கும் உடலமைப்பைப் பெற்றவர்களின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை நீசமாகவோ அல்லது வலுக்குன்றியோ இருக்கும் என்பதை 
மறுப்பதற்கில்லை . 

சந்திரனின் முக்கியமான வேலை என்ன வென்றால் ரத்தம், உமிழ்நீர் சுரத்தல் உள்பட உடலில் உள்ள திரவப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதே ஆகும் .

அடுத்த பதிவில் செவ்வாயை பார்க்கலாம் 

medical astrology signs- vedic medical astrology- astrology body parts- medical astrology remedies
medical astrology predictions- medical astrology chart free
medical astrology pdf- planets and body parts astrology

வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது உண்மையா ?

நம் மூதாதையர்களின்  காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகிறார்கள் என்பதை  முன் கூட்டியே அறிந்துகொள்ள   வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.இன்றும் பாரதம் மட்டுமின்றி சைனா போன்ற நாடுகளிலும் இம்முறை அவர்களின் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் இந்த கலை பின்பற்ற படுகின்றது 

வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை காணும்  இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்பட்டு வருகிறது 

ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.

பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும்.

அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்‘ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹூபட் ஸ்வாஹா’என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்..

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது எந்த அளவு உண்மையாக பின் பற்ற படுகிறது என்று தெரியவில்லை - Deva prasanam related article or kerala chozhi prasannam method

prasannam astrology in tamil- ashtamangala prasnam online- prasannam astrology online- what is ashtamangala prashne
ashtamangala question- ashtamangala prasnam kannada- prasannam meaning in tamil- ashtamangala prasnam pdf


நாகருக்கு பால் ஊற்றுவது ஏன் ? - Tamil astrologer answer

இந்துமதத்தில் நடத்த படுகின்ற ஒவ்வொரு பரிகார பூஜைகளுக்கும் பின்னால் ஓர் ஆழ்ந்த அறிவியல் உண்மை உண்டு என்பது நாம் அறிந்ததே .அதுபோல் தான் இந்த நகராஜாவிற்கு ராகு காலங்களில் பக்த்தர்கள் பால் ஊற்றுவதும்.இந்த நாடு மலை மரம் குளம் ஏரி என்று பசுமையுடன் ஒரு காலத்தில் விளங்கியது .அதனால் அது சில நேரங்களில் விபரீதமாகவும் முடியும் .

மரம் நிறைந்த கிராமங்களில் பாம்புகளின் தொல்லை அதிகமாக காணப்பட்டது .இந்து மத தர்ம படி .

பிற உயிரினங்களை கொல்வது பாவமாக நம் மூதாதையர்கள் கருதினார்கள் அதே நேரம் பாம்பின் இனப்பெருக்கத்தை தடுக்கவும் வேண்டும் அதனால் பாலுடன் முட்டை கலந்து பாம்பிருக்கும் புற்றின் மேல் ஊற்றினார்கள் ..அப்படி செய்வதின் மூலம் பாம்பு முட்டை இடாமல் அதன் இனப்பெருக்கத்தை தடை பெறச்செய்தார்கள் ..

இதுவே பின் நடைமுறை வாழ்க்கையில் நாக தோஷம் ஜாதகத்தில் இருந்தாலோ அல்லது ராகு கேது திசை நடக்கும் போதோ சர்பத்திற்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டனர் .எது எப்படியோ கடவுளை
நம்பி மற்ற உயிரினங்களை துன்புறுத்தாமல் செய்யும் எந்த பரிகாரமும் வீண் போகாது என்பது பழைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது

tamil astrologer -tamil astrology 2017- best jothidam in tamil language- tamil jothidam 2017-tamil astrology today-astrology in tamil by date of birth- computer josiyam in tamil-my date of birth astrology in tamil-astrology in tamil software free download - tamil astrologer

Sunday 22 October 2017

ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய முக்கிய வழிபாடு

ஒரே நேரத்தில் முப்பது முக்கோடி தெய்வங்களை பூஜிக்கின்ற  ஒரு வழிபாடே ஸ்ரீகௌரி வழிபாடு என்று பழய ஆன்மீக புராணங்கள் சொல்கிறது . நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கௌரி தேவி 108 வடிவங்களில் அவதரித்ததாகவும்  புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஆனால், 108 வடிவங்களில் கௌரியை வழிபடுவது சிரமம் என்பதால் , கௌரியின் பதினாறு வடிவங்களை ஒருமனே பூஜிக்கும் நோக்கில்  கௌரி வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபடச்சொன்னார்கள் .

கௌரியின் பதினாறு வடிவங்களில் ஸ்வர்ணகௌரி விஷேஷம் .இந்த சொர்ண கௌரியை விரதம் இருந்து வழிபடும் மரபு இந்தியாவில் உள்ள இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன . 

சொர்ண கௌரிக்கு விரதம் ஜாதக ரீதியாக தரும் பலன்களை கீழே விவரித்துள்ளோம் 

 ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை:

விரதத்திற்கு முன் வீட்டின் முன் பக்கம் மற்றும் பூஜை அறையை  சுத்தம் செய்ய வேண்டும். தேவியின் முகத்தை ஒரு கலசத்தில்ப்ரதிஷ்ட்டை செய்து அதை நன்கு அலங்கரிப்பார்கள் . தேவியின் பிரதிமை இல்லாதவர்கள் என்றால் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜிக்கலாம்.

காலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பின் இறைவியை பூஜிக்க வேண்டும் . அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். பின் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி இறைவியை வணங்க வேண்டும். பின் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்பு சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும்.

தீபாராதனைமுடிந்த பின்  இரண்டு நெய்தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும். பிறகு சுமங்கலி பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும்.

அதோடு நிறுத்தி விடாமல் வீட்டின் பக்கத்தில்   உமையவளுடன் இருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும்   . இரவு வேளையில் தூங்க செல்லும் முன் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ணுவது நல்லது 

இந்த பூஜையினால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகவோ ,பகையாகவோ,அல்லது பலமின்றி காணப்பட்டால் அவர்களின் இல் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிப்பார்கள் அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை முறையாக செய்து , அம்மனின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறுவார்கள் 

இந்த விரதம் இருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று, அனைத்து இன்பங்களையும் அடைவார்கள் 
என்பது நம்பிக்கை (ஜோதிடத்தில்  சுக்கிரன் பரிகாரம் பூஜை .)

sukran neecham in tamil- sukra dasa puthi palangal in tamil- sukran neecham means-sukra thisai for meena- pariharam for sukran neecham- sukra thisai palangal-sukra dasa for kataka rasi in tamil
sukran benefits- pariharam for sukran neecham-sukran neecham means-sukran neecham in tamil-sukran god mantra in tamil-sukra dasa pariharam in tamil- sukran in tamil astrology-srirangam temple+sukran- shukra dosha pariharam in tamil

Saturday 21 October 2017

சனி தசை நடக்கும் போது ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தை  பொறுத்த வரை ராகு, கேதுவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே கிரக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மந்தன் என்று அழைக்க படுகின்ற சனியால் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் அதனை ஜாதகர்கள்  கண்டு கொள்வதில்லை. ஆனால் அதேநேரம்  சனியால்  ஏதாவது கெட்டது நடந்தால் தீர்ந்தே போய்விட்டது ..நமக்கு பிடிக்காதவர்களை தொந்தரவு செய்பவர்களை சனியனே என்று அழைத்து நம் கடுப்பை தீர்த்து கொள்வோம்

 எந்தக் கெட்ட விஷயம்  நடந்தாலும் அதற்கு சனியும் ஒரு காரணம் என்ற எண்ணம் மக்களிடையே சில ஜோதிடர்களால் திணிக்க பட்டு விட்டது என்றே சொல்லவேண்டும் . ஆனால் அது உண்மை அல்ல. எடுத்து காட்டாக எம தர்ம ராஜ கதையை எடுத்து கொள்ளுங்கள்  மனிதனின் ஆயுள் முடிந்தது அவனது உயிரைப் பறித்துக் கொண்டு போவது தான் அவர் வேலை 

அவரைப் பொறுத்தவரை சாகப் போகும் நபர் நல்லவரா ?கெட்டவரா? அவர் புண்ணியம் செய்துள்ளாரா அல்லது பாவம் செய்துள்ளாரா என்றெல்லாம் ஆராயமாட்டார் . அவருக்கு வழங்கப்பட்ட பணியை அவர் செவ்வனே நிறைவேற்றுகிறார் அவ்வளவுதான்  அதற்காக அவரை கெட்டவர் ,அயோக்கியமானவர்  என்று கூறி விட முடியுமா ?. அதே போல் தான் இங்கு சனிஈஸ்வரன் நிலை பாடும்

ஊழ்வினையை உணர்த்தக் கூடிய மிக உறுதியான கிரகம் என்று அறியப்படுவது தான் இந்த சனி. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட பலன்களை பாகுபாடின்றி வழங்கக் கூடிய வல்லமை சனிக்கு மட்டுமே உண்டு . கோவம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும் அதேபோல் தான் சனியும்  மனிதநேயம், இரக்க சுபாவம் ஆகியவற்றிற்கு உரியதும் சனி பகவானே என்றால் மிகை இல்லை

ஒருவருக்கு சனி தசை வரும் போது அந்த ஜாதகர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார். எனவே அந்த ஜாதகதாரர்கள் சனி தசையில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இது கடகம், சிம்மம் லக்னத்திற்கும் பொருந்தும்.

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும்  என்று பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றது ஓ ரு சிலர் சனியை புத்தருக்கு இணையாகக் கூறுகிறார்கள் .

ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். மனதை பக்குவப்படுத்தி மனிதனை சித்தன் ஆக்குவதில் சனி வல்லவர் .எனவே பலர் இங்கு சனியை புதனுக்கு இணையாக கூறுவார்கள்

sani dasa sani bhukti palangal in tamil- sani dasa for kumbha rasi- sani dasa for makara rasi
sani dasa for thula rasi- sani dasa for vrischika rasi- shani dasha effects and remedies
sani dasa for rishaba rasi-sani peyarchi 2017 to 2020 predictions in tamil language
sani peyarchi date- next sani peyarchi 2017 in tamil- sani peyarchi 2017 palangal in tamil- sani peyarchi october 2017
sani peyarchi 2017 to 2020 tamil- sani peyarchi 2017 date and time- sani peyarchi 2017 to 2020 tamil language
sani bhagavan pariharam- saneeswaran tamil songs- sani bhagavan magimai serial- sani bhagavan magimai serial song
sani bhagavan movie- sani bhagavan magimai episode 11- sri saneeswara mahimai puthuyugam- shani bhagavan story

Friday 20 October 2017

நாக தோஷம் எதனால் ஏற்படுகிறது ?

ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷத்தை பற்றி நாம் அறிவோம் ..ஆனால் இந்த சர்ப்ப தோஷம் நம் முன் வினை பயனால் தான் ஏற்படுகின்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ..

இந்த நாக தோஷம் வேத ஜோதிட முறைப்படி ஒருவரின் ஜாதகத்தில் நிற்கின்ற ஸ்தானம் செய்த தீவினைகளின் தன்மைகளுக்கு ஏற்றார் போல் மாறும் ..

ஒரு ஜாதகத்தில் 1-5-9 போன்ற இடங்களில் சனி ,ராகு, கேது ,போன்றவை இருப்பது நாக தோஷம் என்று அறியப்படுகிறது .ஒருவரின் முந்தய பிறவியில் ஆண் நாகமும் பெண் நாகமும் ஒன்றாக இணைத்திருக்கும் நிலையில் அதை துன்புறுத்தி இருந்தால் இந்த பிறவியில் அவருக்கு ஜாதகத்தில் லக்னத்திற்க்கு ஏழாம் இடத்தில ராகு கேது அமைந்து அவர்களின் திருமண வாழ்வில் சில இன்னல்களை உருவாக்கும் .

அதுபோல் ஒரு பாம்பு தன்னுடைய இரையை தேடி போகும் பொழுது அதை துன்புறுத்தினால் அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் தொழில் ஸ்தானமான 10 இடத்தில ராகு அல்லது கேது அமைந்து அவர்களின் தொழிலை கெடுக்கும் பஞ்சத்தை உருவாக்கும் .

மேலும் பாம்பு முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் காலத்தில் அல்லது பாம்பு தன் குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் நேரத்திலோ அதை துன்புறுத்தி இருந்தால் இந்த பிறவியில் அவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தில அமர்ந்து கடுமையான புத்திர தோஷத்தை விளைவிக்கும் ..

இதெல்லாம் பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன

Thursday 19 October 2017

திரி வகைகளும் அவற்றின் பயன்களும் மற்றும் திசைகளும் தீபம் ஏற்றுதலின் பலன்களும்

பஞ்சுத்திரி : பஞ்சுத்திரியால் விளக்கேற்றுவது மங்களம் உண்டாகும்

தாமரை தண்டு திரி : தாமரை தண்டு திரி முன் வினை பாவத்தினை விலக்கும் ,மக்கள் செல்வம் உண்டாக்கும் ,தெய்வ குற்றம் நீங்கும்

வாழை தண்டு திரி : வாழை தண்டு திரி குழந்தை செல்வதை தரும் ..தெய்வ குற்றம் அகலும் ,குடும்ப சாபம் நீங்கும்

வெள்ளை எருக்கம்பட்டை திரி : வெள்ளை எருக்கம் பட்டை திரியை செய்து தீபம் ஏற்றினால் பெரும் செல்வம் சேரும் ,பேய் பிசாசு தொல்லை அகலும்

புது மஞ்சள் சேலை துணி திரி : இந்த துணியால் தீபம் ஏற்றினால் அம்மன் அருள் கிடைக்கும் ,வியாதிகள் நீங்கும் ,திருமண தடை அகலும் ,மலட்டு தன்மை அகலும் ,செய்வினை அகலும்

புது சிகப்பு சேலை துணியால் ஆனா திரி :திருமண தடை அகலும் ,மலட்டு தன்மை அகலும் ,செய்வினை அகலும்

புது வெள்ளை துணி திரி : தரித்திரம் நீங்கும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்

திசைகளும் தீபம் ஏற்றுதலின் பலன்களும் 

கிழக்கு நோக்கி தீபம் : கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் துன்பம் ஒழியும் .வீட்டை பிடித்த பீடை தீரும்

மேற்கு நோக்கி தீபம் : மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை தீரும் சனி பீடை ஒழியும் ,கிர க தோஷம் நீங்கும் பங்காளி சண்டை தீரும்

வடக்கு நோக்கி தீபம் : வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடை மற்றும் மற்றும் கல்வி தடைகள் நீங்கும்
செல்வம் பெருகும் மற்றும் மங்களம் உண்டாகும்

தெற்கு நோக்கி தீபம் : இறந்த வீட்டில் மட்டும் .. இடங்களில் தெற்கு நோக்கி தீபம்  கூடாது  - Article by jothidam karka jothidam padam

Tuesday 17 October 2017

ராகு கேது தோஷம் எதனால் ஏற்படுகிறது ?















முன்னோர்கள் செய்த நன்மைகளை நாம் அனுபவிக்கும் போது அவர்கள் ரகசியமாக செய்த பாவங்களையும் நாம் தானே அனுபவிக்க வேண்டும் .

சேர்ந்திருந்த தம்பதிகளை அதிகாரத்தினாலோ பகையினாலோ பிரித்தால் அவர்கள் செய்த பாவத்தை
அவர்கள் மூன்றாவது தலைமுறையினர் அனுபவிக்கிறார்கள்

வயதான பெண்களை அதாவது அது தாயாகவோ சகோதரியாகவோ இருந்தாலும் அவர்களை சரியாக பராமரிக்காமல் அவர்கள் சாபத்திற்கு நாம் ஆளாவது

கூட்டு குடும்பத்தை பிரித்தால் பெரியோர்களின் சாபம் பெறும் அபாயம் ஏற்பட்டு நாக தோஷம் உருவாகலாம்

சகோதரனை வஞ்சனையால் பிரித்து சொத்துக்களை அனுபவித்தல்

பெற்ற தாயின் வயிற்றெச்சலை பெறுதல்

வேலை செய்தவர்களுக்கு சரியான கூலி கொடுக்காமல் ஏமாற்றுவர்களுக்கு கொடிய சர்ப தோஷம் உண்டாகிறது

பிறர் குடும்பத்தை நடு தெருவிற்கு கொண்டு வருதல்

குழந்தைகளை கொடுமை படுத்துதல்

கிடைத்த லாபத்தை முறைக்க பிரித்து கொடுக்காமல் இருந்தல்

நம்பிய நண்பர்களை ஏமாற்றி சொத்து சுகம் அனுபவித்தல்

இவை எல்லாம் அகத்தியர் நாடி நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

Article about ragu and kethu thosham and parikaram

சகட யோகம் அல்லது தாரித்ரிய யோகம் உள்ளவர்களுக்கான பரிகாரம் - sakada yogam parikaram

முதலில் இந்த சகட யோகம் என்ன என்பதை பார்ப்போம் .ஒரு ஜாதகரின் ராசி கட்டத்தில் சந்திரனுக்கு 6 - 8 -12 ல் குரு பகவான் வீற்றிருக்க பெற்ற ஜாதகருக்கு சகட யோகம் உண்டாகிறது .

இவர்களுக்கு ஒரு நிலையான வாழ்வு எப்பொழுதும் இருப்பதில்லை .எப்பொழுதும் சோகத்திலே மூழ்கி கிடப்பார்கள் .ஒரு நல்ல வருமானம் இருப்பதில்லை .

மன அழுத்தம் உடையவர்களாக இருப்பார்கள் கடன் தொல்லை இருக்கும் .மற்றவர்களிடம் அவமான பட வேண்டிய சூழ்நிலை வரும் .பூர்வீக சொத்துக்கள் கிடைக்காமல் போகும் அல்லது கிடைத்த சொத்துக்களை இழப்பார்கள் ..குறிப்பாக இவர்கள் ஒரு மேடுபள்ளமான வாழ்க்கையை தான் வாழ்வார்கள் .

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் இராஜ இராஜேஸ்வரி யந்திரம் வாங்கி பூஜை செய்யலாம் அல்லது யானை முடி மோதிரம் அணியலாம் ..இதை செய்து வருபவர்களுக்கு இந்த தோஷத்தில் இருந்து 
மோட்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை 

சனி ப்ரீத்திக்கு எளிய முறைகள் - sani thosham parikaram

















1.சனிக்கிழமை அன்று கருப்புக்கரை வேட்டி அல்லது கருப்பு வஸ்திரம் புதிதாக வாங்கி தானம் செய்யவும்

2.புதிய செருப்பை தனமாக வழங்கவும் 

3.சனிக்கிழமை அன்று எள் எண்ணை இரும்பு சட்டியில் ஊற்றி சனி தோஷம் உடையவர்கள் முகம் பார்த்து சட்டி யுடன் தானம் கொடுக்கவும் பெறுவர்களுக்கு உரிய தட்சிணை அளிக்கவும் .தானம் கொடுத்தபின் 
  மங்களப் பொருள்களை வாங்க வேண்டும் 

4.கருப்பு எள்ளை புதுத்துணியில் வைத்து வெற்றிலை பாக்கு காசுடன் தானம் கொடுப்பது நல்லது ,முழு கருப்பு உளுந்தை கருப்பு துணியில் கட்டி கருப்பு நிறமுள்ள மனிதனுக்கு தானம் கொடுப்பது நலம் ..உடைத்த 
  உளுந்தை தானம் செய்யக்கூடாது 

5.கோதுமை தானியத்தை மஞ்சள் துணியில் கட்டி சனிக்கிழமை தானம் செய்க 

6.சர்க்கரை பொங்கலை வாழை இலையில் வைத்து தட்சணையும் தானம் செய்யவேண்டும் .இதில் மிகசிறிய அளவு எள் கலந்து கொள்க ..மிகுந்ததை மற்றவர்களுக்கு கை நிறைய வழங்கவும் 

7.தொழு நோயை நீங்கள் செய்யும் சிறு உதவியாலும் சனி பகவானின் அருள் கிடைக்கும் 

8.ஏழரை சனி உள்ளவர்களுக்கும் அஷ்டம சனி உள்ளவர்களுக்கும் நள சரித்திரம் பிடித்த சனி விலகுகிறது 

9.திருநள்ளாறு சென்று சனி பகவானை வழி பட்டு வர சனி தோஷம் நீங்குகிறது 

Thursday 12 October 2017

பெண்களுக்கு முத்தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரம்

முதலில் இந்த முத்தோஷம் என்பது என்னவென்ற கேள்வி உங்களுக்கு எழலாம் .பெண்களுக்கு பொதுவாக 

தொடு தோஷம் 
காழ்ப்பு தோஷம் 
தீட்டு தோஷம்  

போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது ..அதனால் இது போன்ற தோஷங்கள் நீங்க பெண்கள் கண்ணாடி வளையல்கள் 21 வாங்கி அவற்றை சுடு நீரில் போட்டு எடுத்து பின்னர் மஞ்சள் கலந்த 
நீரில் அவற்றை நனைத்து அதை ஆடி பூரத்தன்று அம்மன் சன்னதியில் கட்டி தொங்க விட வேண்டும்..இவ்வாறு செய்தால் தோஷங்கள் நீங்கும் ..இதை நம்பிக்கையுடன்  செய்து வழி பட வேண்டும் 

Wednesday 11 October 2017

ஹலால் உணவு உட்கொள்ளுவது சனாதன முறைப்படி சரியா ?


இந்த ஹலால் உணவு கடவுளின் பெயரை சொல்லி சில மத கோட்ப்பாடுகள் 
பின்பற்ற அறிவுறுத்துகின்றன ..ஆனால் மத கோட்பாட்டையும் மீறி சில இடங்களில் ஹிந்துக்களும் தங்கள் குடும்ப கோவில்களிலேயே இந்த ஹலால் முறையை பின்பற்றுகின்றனர் .

குடும்ப கோவில்களில் மிருகங்களை வாதம் செய்வதோடு நிறுத்தி விடாமல் அதை கடவுளின் பெயர் சொல்லி சாமி யாடிகள் அதன் உயிர் போகும் நேரத்தில் துடிக்க துடிக்க வாய் வைத்து கடித்து துன்புறுத்துவது 
முழுக்க முழுக்க ஹலால் முறை ..

இது சனாதன முறை படி மிக கொடிய பாவம்.அதுபோல் எந்த உணவகங்களில் ஹலால் செய்யப்பட்ட உணவு என்றிருந்தால் அதை புறக்கணிப்பதே நலம் ..சைவத்தை பின் பற்றும் சீக்கியர்கள் சிலர் மாமிச பிரியர்களாக இருப்பார்கள் ..ஆனால் அவர்கள் ஹலால் உணவு உட்கொள்ள மாட்டார்கள் மாற்றாக ஜட்கா ( ஹலாலுக்கு எதிர்மறை அதாவது துன்புறுத்தாமல் கொல்வது ) முறை உணவினை உட்கொள்வார்கள் 

மேற்சொல்ல பட்ட விஷயத்தை சாதி மத பாகுபாடில்லாமல் அனைவரும் பின் பற்றுவது நலம் 

Tuesday 10 October 2017

கிரகங்கள் உருவாக்கும் நோய்கள் - Planets Diseases

சூரியன்
சூரியன் கண்னிற்கு நோயும் தலை வலியையும் , காய்ச்சலையும் தருகிறது அதுமட்டுமில்லாமல் , பசியின்மை, வயிற்றுப்போக்கு, இதய நோய், பித்தம், தாகம், வெய்யில் வெப்பத்தாக்கு நோய். போன்றவற்றை 
தருகிறது 

சந்திரன்
சந்திரன் பொதுவாக ஒரு ஜாதகத்தில் பாலியல் நோய்கள், தோல் நோய்கள் மற்றும் குளிர் இருமல், கபம், சின்னம்மை அல்லது தட்டம்மை, சோம்பல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மன நோய், வலிப்பு நோய், டைபாய்டு, சைனஸ், கண் நோய்கள், வீக்கம், இரத்தம் அசுத்தங்கள், பகட்டு,
வயிறு வலி, பைத்தியம், குளிர் கபசுரம்.போன்றவற்றை தருகிறது .,சந்திரன் பலமிழந்தால் தோல் வியாதி 
தவிர்க்க முடியாததொன்றாகும் 

செவ்வாய் (குஜன்)
குஜன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய் ஒரு மனிதனுக்கு விபத்துகள், வெட்டுக் காயங்கள், விந்து இழப்பு, நாய்க்கடி, இரத்த குறைபாடு, இரத்த இழப்பு, இரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், இரத்த சோகை, பித்த நீர், தாகம் போன்றவற்றை தரும் ..இரத்த சம்பந்தமான நோய்களுக்கு முதல் காரணம் செவ்வாய் தோஷம் பெற்றிருப்பது 

புதன்
வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தையின்மை, குடல் கோளாறு, தோல் நோய்கள், மன நிலை தடுமாற்றம், படை, சொறி, சிரங்கு, தொண்டைப் புண், டான்சில்கள், 
ஊமை, வழுக்கை, வட்டப் படை, வெண் குஷ்டம்.

வியாழன் (குரு)
இது முக்கியமாக பெண்களுக்கு பார்க்க வேண்டும் குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, ஈரல் நோய்கள், மஞ்சள் காமாலை..பெண்களுக்கு கர்ப்ப பாத்திரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜாதகத்தில் குருவின் இருப்பு தான் 

சுக்கிரன்
நீசம் பெற்ற சுக்கிரன் சுப கிரக திருஷ்டி இல்லை என்றால் தூக்கம் இன்மை ஆண்மை கோளாறு போன்றவையும் ..அது மட்டுமில்லாமல் பலம் இழந்து நிற்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு பாலியல் நோய்கள், கருப்பை கோளாறுகள், கண் நோய்கள், சளி மற்றும் சுவாசம், நீரிழிவு, இரத்த சோகை, தோல் நோய், கருப்பை நோய்கள், கருக்கலைப்பு.போன்றவை  தரலாம் 

சனி
சோம்பல், வாயு தொல்லைகள், வாத நோய், கீல்வாதம், குறைபாடுள்ள பேச்சு, பல் வியாதி, அஜீரணம், புண், ஆஸ்துமா.போன்றவை ஏற்படலாம்.. 

ராகு
கண்புரை வரலாம்  பல் வியாதிகள் தரும்  அம்மை, தொழுநோய், தற்கொலை செய்து கொள்வது  உடல் வலி மற்றும்  திக்குவாய், மண்ணீரல் வியாதிகள், வாத நோய், திடீர் மரணம், தற்கொலை அல்லது கொலை , பாலியல் முறை கேடு, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், மிருகங்களுடன் பகை, பாம்பு கடி, பைத்தியம்.போன்றவை தரும் சுப கிரக பார்வை பட்டால் விமோசனம் உண்டு .

கேது
கேதுவின் பலா பலன்கள் ஏறக்குறைய ராகுவை போன்று தான் ,திடீர் மரணம், கொலை, பசி, தோல் வெடிப்புகள்,பாம்புக்கடி, வைரஸ் காய்ச்சல், கட்டி. போன்றவை 

மேற்குறிய பலன்கள் யாவும் சுப கிரக பார்வையோ அல்லது குறிப்பிட்ட கிரகம் பலம் பெற்றோ காணப்பட்டால் நோய்களின் பாதிப்பு குறையும் அல்லது நோய் அவர்களை சீண்டாது - Article by tamil astrologer ragav

Sunday 8 October 2017

இரட்டை வயசில் கல்யாணம் செய்யலாமா என்ற கேள்விக்கான தெளிவான பதில் - tamil marriage time & marriage matching article

ஒன்றுடன் இரட்டிப்பாயின் திருமணம் தவிர்க்க வேண்டும் என்று ஒரு சொல் புழக்கத்தில் உள்ளது .ஆனால் அதன் உண்மையான பொருளுக்கும் நடைமுறை வாழ்வில் உள்ள பழக்கத்திற்கும் ஒரு முரண் பாடு உள்ளது  .. முந்தைய காலத்தில்  வயதான சில  செல்வந்தர்கள் ஏழை பெண்களை தங்கள் ஆசைக்காக திருமணம் செய்து வந்த பழக்கம் இருந்தது  ..

அதாவது பதினாலு வயதான பெண்ணை 28 வயதான ஆண்மகனோ .அல்லது 35 வயதான பெண்ணை 70 வயதான ஆண்மகனோ மணமுடிப்பார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் ..அப்படி என்றால்தாம்பத்திய சுகம் இருக்காது என்பது நாம் புரிந்து கொள்ளலாம்  ..

கருத்து வேறு பாடுகள் வந்து அவர்கள் திருமணம் வழக்கை தோல்வி யில் முடிவடையலாம்  ..அதுவே இந்த ஒன்றுடன் இரட்டிப்பாவின் திருமணம் தவிர்க்கவேண்டும் என்று சொல்வதின் காரணம் ஆகும்  ..ஆனால் நடைமுறையில் இங்கு  இரட்டிப்பு வயது வந்தாலே  திருமணம் செய்யக்கூடாது என்று பழக்கம் ஆக்கி கொண்டார்கள்

மற்றபடி இரட்டை வயதில் திருமணம் செய்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்பது அடியேனின் கருத்து  - posted by astrologer ragav


tamil jothidam,astrologer in tamil nadu,astrology in tamil,jothidam,Horoscope matching,Horoscope tamil' name='astrologer in chennai if you see lot of tamil astrologers is there.they are giving tamil jothidam jathakam,astrology in tamil,jothidam,horoscope matching,horoscope in tamil,Tamil Astrology - Tamil Horoscope - திருமண பொருத்தம் தமிழில் - Jothidam in Tamil - Jathagam - Josiyam - thirumana Porutham - Marriage Matching Online - Astrology in Tamil - Horoscope in tamil, Tamil Jathagam porutham for Marriage -free marriage matching in tamil - marriage matching horoscope in tamil - online marriage matching software - Tamil Astrology Website - Tamil Jothidam - Rasipalan in Tamil - Astrology Tamil 2017 2018 - Horoscope Tamil 2017 - free tamil Astrology marriage matching-Tamil astrologer,tamil horoscope,tamil vedic astrology,Astrology in tamil, horoscope in tamil, astrology tamil, tamil astrology, tamil horoscope, Marriage matching website in tamil, Free marriage matching, jothidam tamil, jathagam in tamil, jathaga porutham, jothidam jathagam, jothidam, jathaga porutham in tamil, zodiac marriage matching, jatha marriage matching in tamil - marriage matching horoscope in tamil, marriage matching in tamil astro

Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil-Tlogy, ten marriage matching in online

Thursday 5 October 2017

பட்சி கரைதல் - காகம் கரைதல்






















இம்முறையில் கரையும் காகத்தின் தன்மை ,பார்ப்பவர்களிடம் இருந்து அது உள்ள திசை கோணம் அப்போதைய நேரம் .அது நடந்து கொள்ளும் விதம் இவை எல்லாம் கவனிக்க பட வேண்டும் என்று 
சகுனத்தை பற்றி விளக்குகின்ற பழைய நூல்கள் கூறுகின்றன 

வலப்புறம் கரைந்தால் நன்மை , பின்புறம் என்றால் வெற்றி , தலை முடியில் அடித்தால் தீமை ஆனால் அதையே கோவிலின் உள் புறத்தில் வைத்து அடித்தால் நன்மை , இறக்கைகளை அடித்து காகம் கூவுவதை காண்பது விபத்திற்க்கான அறிகுறி , பட்டுப்போன மரத்தின் மேல் இருந்து கூவினால் பஞ்சம் , மாளிகை மேல் அமர்ந்து கூவுவது மிகவும் நன்மை 

முட்ச்செடி மேல் இருந்து கத்தினால் எதிரிகளால் தொல்லை , கதவை பார்த்து கரைந்தால் விரைவில் அபாயம் 
அசுத்தங்களை உண்டால் நன்மை , உடைகளை பற்றி இழுத்தால் புத்தாடை கிடைக்கும் ..

தலையின் உச் சியின் மேல் கரைந்த படி பறந்து சென்றால் பேய் நடமாட்டம் என்று பொருள் 

Wednesday 4 October 2017

சுப முகூர்த்தங்களுக்கு பொருந்தாதவை |marriage matching horoscope in tamil

முகூர்த்த விதானம் 

சுப முகூர்த்தங்களுக்கு பொருந்தாதவை 

1)நட்சத்திரங்கள் : ஜென்ம நட்சத்திரமும் , ஜன்ம நட்சத்திரத்திற்கு 3,5,7,10,14,19,22,27 ம்  நட்சத்திரங்களும்
 ,சந்திர லக்கினத்திற்கு 8ம் ராசிக்குரிய 2 1/4 நட்சத்திரங்களும் சுப கருமங்களுக்கு விலக்கபடும் .பெண்ணி
   னுடைய 1,10,19 ம் நட்சத்திரங்களும் , புருஷனுடைய 10 வது நட்சத்திரங்களிலும் விவாகம் செய்யலாம்

2) திதிகள் : சதுர்த்தி ,சஷ்டி ,அஷ்டமி ,நவமி ,தவாதசி ,சதுர்த்தசி

3) யோகங்கள் : மரண யோகம் , உற்பாத யோகம் , பிரபலரிஷ்டம்

4)தனியனாள் ,கரிநாள்

5)இராகு காலம் எமகண்ட காலம்

6)செவ்வாய்,சனி, ஞாயிறு

இவற்றில் ஞாயிறு சாஸ்திரங்களில் விலக்கப்பட்டது என்றும்  ..அனுஷ்டானத்தில் அங்கீகரிக்க பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது

கவனிக்க படவேண்டிய முகூர்த்தம் 

திருமணத்திற்கு முகூர்த்தம் குறிப்பதென்பது தாலி கட்டும் நேரம் குறிப்பது மட்டுமல்ல .திருமண சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது நான்கு முக்கிய நிகழ்ச்சிக்கு நாள் குறிக்கவேண்டும்
அவையாவன

1) முகூர்த்தக்கால் நாட்ட 
2)மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம்
3)பெண் அழைப்பிற்கான நேரம்
4)திருப்பூட்டுதல் என்னும் மங்கள நாண் சூட்டும் நேரம்
5)சாந்தி முகூர்த்த நேரம்

இதில் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்துபெண்ணை
அழைத்து விட யோசிப்பர் .லட்ஷமி கடாட்ஷகம் என்பது நம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று யோசிப்பர்
அதே சமயம் மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் .குறிப்பாக லட்ஷமி என்ற
அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளி கிழமை பகல் வேலையில் பெண் அழைப்பு நடத்தலாம் .பெண் அழைப்பு என்ற சடங்கு தான் புகுந்த வீட்டில் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது

நல்ல சுப யோரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும் .அதே நேரம் குல தெய்வம் அல்லது இஷ்ட்ட தெய்வத்திற்கு வழிபாடு முடிந்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால்
பிறக்கும் குழந்தைகள் பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கை அமையும்


Tuesday 3 October 2017

நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த நேரம் கணக்கிடவும் முறை - tamil vedic astrology time calculating

















நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த நேரம் கணக்கிடவும் முறை என்பது இப்பொழுதுள்ள முறையை விட மிகவும் வித்தியாசமானது .இன்று நம் பின் பற்றும் முறை ஆங்கிலேயர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது ..நம் பாரம்பரிய கணக்கு முழுவதும் நாழிகை வினாழிகையில் வரும் கீழ்கண்டவாறு 

எடுத்து காட்டு 

60 வினாழிகை - 1 நாழிகை (24 மினிட் )
60 நாழிகை - 1நாள் 
2 1/2 நாழிகை - 1மணி 
2 1/2 வினாழிகை - 1 நிமிஷம் 
12 ராசி - 1பகணம் 

இன்று நாமே ஒரு புது வருட வாழ்த்து சொல்லுவதாகட்டும் ..பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதாகட்டும் இரவு 12 மணிக்கு தான் சொல்கிறோம் இது சரியான முறையாக சொல்ல முடியாது ..ஏனென்றால் இரவு 12 மணிக்கு தான் அடுத்த நாள் பிறக்கிறது என்பது வெளிநாட்டு முறை .சூரிய உதய நாழிகை வினாழிகை தன நமக்கு புது நாள் என்பது இந்த முறையும் ..மேற்சொன்ன கணக்கும் சோதிடர்கள் மட்டும் அல்ல சாமானியர்களுக்கு தெரிந்து வைத்து கொள்ளவேண்டியது அவசியம் ஆகும்

                                                                                             - Article by jothida chakram

 
jothidam karka tamil pdf,jothidam karka pdf,jothidam karpom,jothidam padam,tamil jothidam lessons pdf-jothidam karka in tamil youtube,jothidam parpathu eppadi,tamil jothidam blogspot- thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for- marriage tamil jothidam online-tamil jothidam 2017-best jothidam in tamil language-tamil jothidam free software download-jothidam tamil books dinakaran jothidam-tamil jothidam marriage-dinamani jothidamin tamil

Copyright @ 2017 Vidwans web creations.