Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil, top 10 astrologers in chennai,famous marriage astrologers ,famous nadi astrologers in tamilnadu,,indian astrologer ,online famous,indian astrology,,indian astrology preiions,famous indian astrologer,best indian astrologer,best indian astrologer in the world,astrologer in tamil, online indian astrologer,best indian astrologer online, tamil astrology predictions, astrological predictions based on date of birth,online astrology by date of birth,astrology reading by birth date jathakam based on date of birth,birth time horoscope, horoscope by date of birth and time, tamil astrology , Astrologer,Numerology,Astrology,Horoscopes,Tamil Astrology, Horoscope in Tamil, Tamil Jothidam,astrology predictions, astrology consultation,Future Astrology,Hindu astrology ,Indian astrology,Jadhagam,Astrologer Career Consultant,best astrologer in tamilnadu,best astrology, famous astrologer in tamilnadu,best,famous,top,good Astrologer,computer tamilnadu astrologer,numerologist,Astrology Services,Marriage matching Astrologer,Astrology experts,Most popular astrologer,Specialist,famous good best Astrologer, marriage matching astrologers, good jyotish in, genuine astrologers, best astrology in, best astrologer india, famous astrologers in, vedic astrologers,tamil jothidam in theni,tamil jothidam in madurai,tamil jothidam in nagercoil,tamil jothidam in kanyakumari,tamil jothidam in chennai,tamil jothidam in madurai,tamil jothidam in trichy,tamil jothidam in vellore,tamil jothidam in kovilpatti,tamil jothidam in chengalpattu,tamil jothidam in tirunelveli,tamil jothidam in ramnad

Friday 29 September 2017

ஆயுத பூஜை யாரால் ஆரம்பிக்கப்பட்டது - aautha poojai explanation tamil


















ஆயுத பூஜை என்பது பாண்டவர்கள் தான் ஆரம்பித்து வைத்ததார்களாம் . வனவாசம் செய்யும் போது, தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் மேலே மறைத்து வைத்தார்களாம்.

வனவாசம் முடிந்த பிறகு  அவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்து கொண்டார்களாம். பிறகு வருடா வருடம் அதை நினைவு கூறும் வகையில்,

அந்த ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தார்கள் என்று
சில நூல்கள் சொல்கிறது  அதுவே தொடர்ந்து ஆயுத பூஜை என்றாகியது 

கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது - ezharai sani effects in tamil


















கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே நட்சத்திர பொருத்தம் தசா சந்தி போன்றவற்றை பார்த்து பொருத்த வேண்டும் என்று பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள் 

ஆனால் சில நேரம் நம்  கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விட்டது எனக்கொள்வோம் . விதியில் பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விடும் 

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர் அது நல்லதல்ல திடீர் விபத்து குடும்பத்தில் உயிர் சேதம் வரை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் 

ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும் அது ஏன் அப்படி சொல்கிறோம் என்றால்  

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றது 

ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அசுப பலன்கள் இருந்தாலும் குறையும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது  

முக்கியமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 

ஒரு ஜாதகருக்கு வரப்போகும் மனைவி எந்த நட்சத்திரம் என்று அறிவதற்கு - Tamil horoscope matching wife which nakshatra














ஒரு ஜாதகருக்கு வரப்போகும் மனைவி எந்த நட்சத்திரம் என்று அறிவதற்கு

7 ஆம் அதிபதியின் நட்சத்திராதிபதி

7 ஆம் பாவத்தின் நட்சத்திராதிபதி

7 ஆம் அதிபதி, 7 ஆம் பாவம் இவைகள பார்க்கும் கிரகங்களின் நட்சத்திராதிபதி.

இதுவே முக்கியமாக பார்க்கப்படும்

கர்ப்பம் தரித்திருக்கும் பொழுது குழந்தைக்கு ஏற்படும் கிரகங்களின் பலன் - pregnant woman & Children jathakam palan















கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் கரு திருவடிவமாகவும் அதன் அதிபதி சுக்கிரனாகவும் அமைவார்கள்.

2வது மாதத்தில் கரு கடினமானதாக உருமாற அதன் அதிபதி செவ்வாய் ஆகும்

3வது மாதத்தில் கரு வளர்ந்துள்ள நிலையில் அதன் அதிபதி குருவாக அமைகிறார்

4வது மாதத்தில் கருவில் எலும்பு உருவாகும் நிலையில்  அதன் அதிபதி சூரியன்.

5வது மாதத்தில் கருவில் தோல் மயம் உருவாகும் நிலையில் அதிபதி சந்திரன்.

6வது மாதத்தில் குழந்தையாகி முடி உருவாகும் நிலையில் அதிபதி சனீஸ்வரன் ஆவர்

7வது மாதத்தில் குழந்தைக்கு நினைவு உண்டாகும் நிலையில் அதிபதி புதன் கிரகமாகும்

8வது மாதத்தில் குழந்தைக்கு பசி தாகம் இவகளின் உணர்வு ஏற்படும் நிலையில் அதன் அதிபதிகள் சூரியனும் சந்திரனும் ஆவார்கள்

9வது மாதத்தில் குழந்தைக்கு  பசி தாகம்  உணர்வு ஏற்படும் நிலையில். அதன் அதிபதிகள் மீண்டும் சூரியனும் சந்திரனுமே .

10வது மாதத்தில் குழந்தைக்கு பசி தாகம் இவகளின் உணர்வு ஏற்படும் நிலையில் அதன் அதிபதிகள் சூரியன், சந்திரன்.(8,9,10 மாதங்களில் அதிபதி சந்திரன் சூரியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


அந்தந்த மாதத்திற்குரிய கிரகம் பலமானால், குழந்தயின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படா. அந்த கிரகங்கள் பலமில்லாமல் இருந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும். மூன்றாவது மாதத்திற்குரிய கிரகம் குரு பலமின்றி இருந்தால் அந்த மாதம் குறைப்பிரசவமாகிவிடும். அதற்குப்பின் உள்ள மாதத்திற்குரிய கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற நிலைகளில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தை உண்டான காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பையும் சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பையும் கொண்டதாக அமையும்.

சுகப்பிரசவம்:- 

பிரசவம் என்பதே மறுபிறவிக் கொப்பாகும் என்பார்கள். அது சுகமானால் நலம்தானே!.

சுபர் லக்கணத்திலும், (அ) சந்திரனுக்கு 2,4,6,7,9,10இல் சுபர் இருந்தாலும், அவர்கள குருபார்த்தாலும் சுகப்பிரசவமாம். 

Wednesday 27 September 2017

ஐந்தாம் வீடும் அதன் நன்மைகளும் - தமிழ் ஜோதிட சக்கரம் ( Tamil jathakam 5th house)

ஐந்தாம் வீடு - முதல் - Tamil jothidam 5th house part 1

லக்னத்திலிருந்து ஐந்தாம் வீடு என்பது  சந்தான பாக்கியம், புத்திர பாக்கியம், மக்கட்பேறு என்பார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும்  சொல்வார்கள். சந்ததியை விருத்தி செய்யும் வீடு. 

சரி இனி புத்திரன் என்றால் என்ன வென்று பார்ப்போம் 
‘புத்’ என்றால் ஒரு நரகம். அந்த நரகத்திற்கு நாம் போகாதவாறு அதைப் போக்குபவன் அவன், புத்திரன். ஆதலால் அவனுக்கு அந்தப் பெயர் அமைந்தது.

மழலை பேசும் மக்கட் செல்வத்தை தருவதும் தராமற்போவதும் ஐந்தாம் வீடே மிக முக்கியமான காரணம் நம் முன்னோரை பற்றியும் பின்னோரை பற்றியும் அறிவிக்கும் பொது ஸ்தானம் 

‘குரு’வுக்குப் புத்திரகாரகன் என்று பெயர். மக்களைப் பிரதிபலிக்கும் கிரகம் குரு. இந்த ’குரு’ தம்பதிகளின் ஜாதகத்தில் வலுத்திருந்து, புத்திர பாவமான ஐந்தாம் பாவமும் பலம் பெற்றிருக்குமானால் புத்திரவிருத்தி பலம் 




இதே புத்திரகாரகனாகிய ’குரு’  அதே ஐந்தாம் பாவத்தில் இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு குறை ஏற்படுத்தலாம்

குறிப்பிட்ட இந்த காரகன், அதே பாவத்தில் இருக்கக்கூடாது என்பது சாத்திரத்தில் உள்ள கூற்று (காரகோ பவ நாஸ்தி). இதற்கும் ஒரு விதிவிலக்கை பெரியோர் கூறுகின்றனர். ஐந்தாம் வீட்டின் பலமும், ஐந்தாம் வீட்டோனும் பலமும், லக்னாதிபதி பலமும், 9ம் வீட்டோன் சிறப்பும், சுபக்கிரஹங்களின் கூடுதலும் ஒன்று சேருமானால், ஐந்தாம் வீட்டில் இருக்கும் குருவினால் ஏற்படும் குறையைப் போக்குவர். கீழ் கண்ட படத்தை
பார்க்க

நமக்குத் தெரிந்து எத்தனையோ ஜாதகர்களுக்கு ‘குரு’ ஐந்தில் இருந்தும் கூடப் புத்திர சந்தானம் கிட்டியிருக்கிறது. அதற்குக் காரணம் யாம் மேற்சொன்ன இதர பலன்கள் காரணமாக இருக்கும் 


பாகம் இரண்டு - Tamil jothidam 5th house part 2  

இனி குலதெய்வமும் ஐந்தாம் வீட்டோனும் 

எல்லாத்தெய்வங்களும் ஓன்று தன என்றாலும் பூர்வ ஸ்தானத்தோடு சம்பந்த பட்ட குலதெய்வம் எல்லா குலத்தோர்க்கும் உண்டு .எதற்கும் இந்த ஐந்தாம் பாவத்திற்கும் மிக நெருங்கிய தொடர்ப்பு உண்டு

அது போல் எந்த ரூபத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதித்தால், குறிப்ப்பிட்டவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிய இந்த 5-ம் வீடு மிகவும் முக்கியம்

5வீட்டுக்கு அதிபதி, இந்த வீட்டினில் இருப்பவர் மற்றும் இந்த வீட்டினைப் பார்ப்பவர் ஆகிய மூவரில் பலம் வாய்ந்தவருக்கு யார்
அதிதேவதையோ, அவரே அந்த ஜாதகருக்கு இஷ்ட தெய்வமாக முடியும்

ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை:

சூரியன் – ருத்ரன்
சந்திரன்: துர்க்கை
செவ்வாய்: முருகன் – ஆஞ்சநேயர்
புதன்: திருமால்
குரு: இந்திரன்
சுக்ரன்: சதிதேவி
சனி: பிரம்மன்
ராகு: சர்ப்பேஸ்வரன்
கேது: விக்னேஸ்வரன்
மேற்சொன்னவை ஒரு சில நூல்களிலிருந்து பெறப்பட்டது.

இன்னும் சில விவரங்களை மற்றொரு நூலிலிருந்து தருகிறோம் .

சூரியன் – அக்னி
சந்திரன்: ஈஸ்வரன்
செவ்வாய்: பூம்யை
புதன்: புருஷோத்தமன்
குரு: பிரம்மன்
சுக்ரன்: இந்திரன்
சனி: யமன்
ராகு: காலன்
கேது: பிரம்மன் – சித்ரகுப்தன்

இதிலுள்ள இரண்டு வகைகளில் எதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

இஷ்டதெய்வம் என்று ஒன்றை நாம் ஏற்றுக் கொண்டு அந்த தெய்வத்தை
திடமான சங்கல்பத்தோடு உறுதியாக பின்பற்றி முறையாக ஆராதித்தால் அந்த தெய்வத்தின் முழுமையான அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும் என்று பல ஆன்மீக நூல்கள் கூறுகின்றது

ஐந்தாம் பாவத்தைப் பார்த்து புத்திர பாக்கியத்தை அறியலாம் அதுமட்டுமல்லாம் அது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனவே தந்தையின் தந்தையைப் பற்றி கூட சொல்லலாம்.

ஏனென்றால் 9ம் வீட்டிற்கு 9ம் வீடு என்பதை நினைவில் கொள்ளவும்

மிக முக்கியமான வீடு என்றும் கூட சொல்லலாம். இந்த ஐந்தாம் வீட்டிற்கு ‘விதி வீடு’ என்றும் ‘பூர்வ புண்ணிய ஸ்தானம்’ என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் ‘Place of  Destiny’ என்றும் சொல்லலாம். இந்த பாவத்தின் மூலம் நாம்  செய்துள்ள பூர்வ புண்ணியம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் அறிய முடியும். ஷேத்ராடணம் என்னும் திருக்கோவில் யாத்திரை செல்வது பற்றியும் அறியலாம். ஒருவர் உலகப் புகழ் பெறுவதற்கும் இந்த பாவம் பலம் பெற வேண்டும்.

ஞாபகசக்தி, பேரறிவு, மந்திர சித்தி, மந்திரி பதவி, புனிதப் பணிகள், மனிதாபிமானம், நன்னடத்தை, நல்லிதயம், கலைஞானம், பொதுக் கல்வி, பிதுரார்ஜிதம் ஆகியவற்றை பற்றி அறியவேண்டும் என்றால் இந்த வீட்டை ஆராய வேண்டும்


ஐந்தாம் வீடு பாகம் மூன்று-Tamil jothidam 5th house part 3

ஐந்தாம் வீட்டில் கிரகங்கள்: பொதுப்பலன்

இனி ஐந்தாம் வீட்டில் இருக்கிற கிரகங்களால் என்ன செய்ய முடியும் என்கிற பொதுப் பலன்களைச் சுருக்கமாக பார்ப்போம்.

சூரியன் 5ல் இருந்தால்: புத்திரதோஷம் ஏற்படும். திரவிய லாபம், மலைப் பிரதேசம் பயணம். வயிற்று உபாதை ஏற்படலாம்.

சந்திரன் 5ல் இருந்தால்: நலங்களைப் பொழிவார். உயர்நிலைக்கு கொண்டு வருவார். அறிவாற்றலை அளிப்பார்.

செவ்வாய்: இவர் 5ல் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் புத்திரதோஷம் இருக்காது. இவர் லக்னாதிபதியாகி 5ல் இருந்தாலும் தோஷம் உண்டாகாது. மற்ற நிலையில் உள்ள இவர், இந்த இடத்திற்கு ஊறு விளைவிப்பார். பகைவரால் தொல்லை, வயிற்று வலி உண்டாகும்.

புதன்: 5ல் பலமாக இருந்தால் அமைச்சர் ஆவார். உயர்நிலைக்கு உத்திரவாதம். மாபெரும் கவிஞராவார். மதிப்பு உயரும். மந்திரசித்தி ஏற்படும்.

குரு: அறிவு, ஆற்றல், பதவி எல்லாம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படலாம். சுப சேர்க்கை ஏற்பட்டால் சுபபலம் ஏற்படும்.

சுக்ரன்: பணம் சேரும், சுகம், சுபிட்சம் கிடைக்கும். அறிவு, திறமை எல்ல இடங்களிலும் வெளிப்படும். ‘பிஸிணஸ்’ செய்யும் தகுதி உண்டாகும். அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நல்லுறவுகிட்டும்.

சனி: புத்திரதோஷம் உண்டாக்குவார். பகைவரால் துன்பம் நேரிடலாம். குறுக்கு வழியில் புத்தி போகும். சனி உச்சத்திலோ ஆட்சியிலோ சுயசாரத்திலோ இருந்தால் நன்மைகள் ஏற்படும்.

ராகு: மூக்கால் பேசும் தன்மை ஏற்படலாம். படிப்பு, அறிவுக்கு வளர்ச்சி ஏற்படுத்துவார். புத்திரதோஷம். மனகிலேசம் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

கேது: இவர் 5ல் இருந்தால் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பு, அறிவு இவற்றில் வளர்ச்சிகள் உண்டு. புத்திரபாவத்தை குறப்பார். மன சஞ்சலம் நிறைந்திருக்கும்.

கிரக சேர்க்கை-பார்வை தரும் பலன்:

இனி இந்த வீட்டை பற்றி வேறு சில விஷயங்களை நம் பார்ப்போம்

தன வாக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவத்திற்கு இது 4ம் பாவமாகிறது.

சுகஸ்தானமாகிய 4ம் பாவத்திற்கு 2ம் பாவமாகிறது. ஆயுள்ஸ்தானமாகிய

8ம் பாவத்திற்கு இது 10ம் பாவமாகிறது. களத்திர ஸ்தானமாகிய 7ம் வீட்டிற்கு

11, முன்னமயே சொல்லப்பட்டபடி 9ம் பாவத்திற்கு 9ம், லாபஸ்தானமாகிய 11க்கு நேர் 7ம் வீடும் ஆகிறது. மேற்சொன்னவை யாவுமே விசேஷமான தனித்தன்மை கொண்டவை.

நமது ஜாதகத்தில் தனஸ்தானாதிபதியும் ஐந்தாம் பாவ தி பதியும் ஒன்று சேர்ந்தால் நன்மை பயக்கும்.

4, 5 பாவாதிபதிகள் ஒன்று கூடினால் யோகம் நல்லது.

7,5 பாவாதிபதிகள் கூடுவதும் சிறப்பானது என்கிறது பழமை ஜோதிட நூல்கள் .

5,9ம் அதிபதிகள் சேர்க்கை மகா பாக்கியமாகும். 5, 11 பாவாதிபதிகள் பார்வை மிகவும் நல்லது. சேர்க்கையாலும் நலமுண்டாகும்.

5ம் அதிபதி 8ம் அதிபதியுடன் கூடினால் சங்கடங்கள் துரிதம் . 12ம் வீட்டோனுடன் கூடினால் பாக்கியங்கள் விரையமாகும். ஆறாம் வீட்டோனுடன் கூடினால் பகைவரால் பாக்கியம் போகும். சுபபலமுள்ள 3ம் வீட்டோனுடன் கூடினால் சகோதர பாக்கியத்தை அளிப்பான். ஐந்தாம் வீட்டோன் சுக்ரனாக இருந்து பலம் பெற்றால் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் உண்டு. செவ்வாயாக இருந்து பலம் பெற்றால் பூமி, வாகனம் சம்பந்தப்பட்டது மூலம் பணம் கிடைக்கும். சகோதரராலும் நன்மை உண்டு. குருவாக இருந்தால் பலம் பெற்றால் அரசினால் பணம், புகழ் எல்லாம் கிடைக்கும். சூரியனால் தந்தை மூலமும் சந்திரனால் தாய் மூலமும் பொருள் லாபம் கிடைக்கும்.

அதாவது அந்த வீட்டுக்குரியவர் யாரோ அந்தக் கிரஹத்தின் காரகத்துவங்கள் மூலம் நலம் சேரும். இதற்கு முக்கியமாக அந்த அந்த கிரஹம் பலம் பெற்றிருக்க வேண்டும்.

ஐந்தாம் வீடு நான்காம் பாகம் - Tamil jothidam 5th house part 4

லக்னமும் ஐந்தாம் வீட்டோனும் 

மேஷ லக்னத்திற்கு 5ம் அதிபதி சூரியன் பலம் பெற்றால் பிதுரார்ஜிதம் நிலைக்கும் என்பார்கள் அதுபோல் அவருக்கு  பிதுர் வழி சொத்துக்கள் கிடைக்கும்.

ரிஷபத்திற்கு 5ம் பாவாதிபதி பலம் பெற்றால்  பெரிய ‘தொழிலதிபர்’ ஆவார்கள் .

மிதுனத்திற்கு பஞ்சமாதிபதி சுபபலத்தில் இருந்தால் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் ஜாதகனுக்கு  தெய்வீக காரியங்களுக்கு செலவு செய்வார்கள்

கடகத்திற்கு யோககாரகனான செவ்வாய் பலம் அடைந்தால் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பூமி சம்பந்தப்பட்ட இனங்களில் அவர்களுக்கு அந்தஸ்து கிடைக்கும்

சிம்ம லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி குரு ஆவார். சொந்த வீடு வாசத்தால் நற்பலன்கள் ஏற்படும். திடீர்ப் பொருள் தன வரமும்கிடைக்கும்

கன்னி லக்னத்திற்கு உச்சமானாலும் ஆட்சி பெற்றாலும் இரண்டுமே நல்லவைதான். 6ல் ஆட்சியானாலும் சொந்த வீடு   யோகம் உண்டு

துலாமிற்கு பஞ்சாமிதிபதி சனி பலம் பெற்றால் ஏராளமாக பல வழிகளில் பொருளும் , பதவியும், புகழும் அவர்களுக்கு கிடைக்கும் என்பார்கள் .

விருச்சிகத்திற்கு 2,5க்குரிய குரு பலம் பெற்றிருந்தால்  நாடாளும் தகுதியும், புகழ் பாக்கியங்களும் அவருக்கு கிடைக்கும் எனலாம்

தனுசு லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பலம் வாய்ந்து இருந்தால் பூமி, நிலம், வீடு, வாகனம் போன்றவைகளில் லாபமும் நற்பலனும் அவர்களுக்கு உண்டாகும்.

மகர லக்னத்திற்கு ஐந்தாம் பாவாதிபதி சுக்ரன். இவர் பலம் பெற்றால் குபேர சம்பத்து கிடைக்கும்.

கும்ப லக்னத்திற்கு பஞ்சமாதிபதி புதன். இவர் பலம் பெற்றால் வித்தைகள் மூலம் புகழ் கிடைக்கும். அஷ்டமாதிபதியும் இவரே ஆவதால் சில சங்கடங்கள் ஏறபட்டு விலகும்.

மீன லக்னத்திற்கு 5ம் வீட்டு அதிபதி சந்திரன். இவர் பலம் ஏற்பட்டால் கலை கவிதை கற்பனையால் புகழ் கிடைக்கும். கலை நிமித்தம் காரணமாக கடல் கடந்து ஜாதகஸ்தான் சம்பாதிப்பர்







Monday 25 September 2017

திதியில் பிறந்தவர்களின் பலன் - tamil astrology thithi predictions














பிரதமையில் பிறந்த ஜாதகன் எதையும் ஆழமாக சிந்திப்பான்

துவிதியையில் பிறந்தவன் பொய் பேச மாட்டான்

த்ரிதியையில் பிறந்தவன் நினைத்த காரியத்தை முடிக்கும் வல்லமை உடையவனாக இருப்பான்

சதுர்த்தியில் பிறந்தவன் மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாக இருப்பான்

பஞ்சமியில் பிறந்தவன் பெண் ஆசை உடையவனாக இருப்பான்

சஷ்டியில் பிறந்தவன் செல்வந்தர்களால் விரும்ப படுவான்

சப்தமியில் பிறந்தவன் இரக்கம் உடையவனாக இருப்பான்

அஷ்டமியில் பிறந்தவன் குழந்தைகளிடம் பிரியம் உள்ளவனாக இருப்பான்

நவமியில் பிறந்தவன் புகழில் நாட்டம் உடையவனாக இருப்பான்

தசமியில் பிறந்தவன் ஒழுக்கம் உடையவனாக இருப்பான்

ஏகாதசியில் பிறந்தால் பொருள் ஈட்டுவதில் நாட்டம்

துவாதசியில் பிறந்தவன் புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்

திரயோதசியில் பிறந்தவன் உறவுகளுடன் விரிசல் ஏற்படும்

சதுர்த்தசியில் பிறந்தவன் மன்னிக்கும் குணம் இல்லாதவனாக காணப்படுவான்

பௌர்ணமியில் பிறந்தால் மிக தெளிவான சிந்தனை சக்தி

அமாவாசையில் பிறந்தவன் தன அறிவையும் ஆற்றலையும் எப்பொழுதும் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவனாக இருப்பான்

Saturday 23 September 2017

நவராத்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் - Tamil jothidam


















1) நவராத்திரி நாட்களில், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்வதற்கு ஏற்ற காலம் என்று
கூறப்படுகிறது .  நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பெண்கள் ‘கன்யா பூஜை’ செய்வதால், சகல செல்வங்களையும் பெறலாம் என சாஸ்திரம் கூறுகிறது

2) ‘சர்வமும் சக்தி மயம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது என்பதை நாம் அறியவேண்டும் .

3)வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சங்களுடன் அந்த வீட்டில் எழுந்தருளிவிட்டாள் என்பது நம்பிக்கையாகும்

4) கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்து நலம் பெறலாம்
.

5) நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று பூஜை செய்து வழிபட்டால், ஶ்ரீஹயக்ரீவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்றைய நாளில் ஶ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தை  சொல்லி வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

6) நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் 1,008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால்,  அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

7) நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை அன்று கடலை, சுண்டல் மற்றும் பழங்கள் கொடுக்கலாம்.  நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

8) அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் பக்திப் பாடலகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட வேண்டும். நவராத்திரி  ஒன்பது நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால், முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி  நாட்களும், வாசலில் தினம் தினம் புதிய புதிய மாவிலைத் தோரணங்கள் கட்டி பூஜை செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்.

9) நவராத்திரி பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மனநிறைவு தரும் வகையில் மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்ற பலவிதமான மங்கலப் பொருட்களைப் பரிசளிக்கலாம். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடையை பரிசாக அளிக்கலாம். ஏழைகளுக்கு உடைகள், உணவு வகைகள் முதலியவற்றை தானமாக அளிப்பது சிறப்பான பலன்களைத் தரும். தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜையை நிறைவுசெய்ய உதவுகின்றன. எல்லோர் மனத்திலும் அன்பை விதைத்து, அகிலம் சிறக்கச்செய்திடுவோம்.

                                                                                     - Article by tamil jothidar ragav

Tuesday 19 September 2017

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்


உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது...

ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் ,  ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு  நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார்.  அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... 

அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று..

உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது  ராகு தசை  உங்களுக்கு நடக்கும். விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் - அவருக்கு உரிய தேவதை முருக கடவுள்..... 

மகம் நட்சத்திரம் - அதிபதி - கேது  - தேவதை  : விநாயக பெருமான். ராசி : சிம்மம். ராசி நாதன் - சூரிய பகவான்.

நடக்கும் தசை - ராகு - அதி தேவதை - துர்க்கை அம்மன்.

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இது குறித்த விரிவாக தெரிந்து கொள்ளலாம்.- Nadaraja silai tamil ragasiyam

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இது குறித்த  விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் என அறியப்படுகிறது  பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் என்பது மனிதனின் நாடி நரம்புகளை குறிக்கிறது 

கோவிலில் உள்ள 9 வாசல்கள், மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.


எதற்கு செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு அதுபோல் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களையே சேர்க்கவேண்டும் - sevvai dosham

செவ்வாய் தோஷம் நீங்க எளிய பரிகாரம் 

ஒருவரின் ஜாதகத்தில் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்க கடுமையான செவ்வாய்தோஷம் உருவாகும் (சுப
கிரக திருஷ்டி இருந்தால் இதில் விதி விலக்குண்டு )..இந்த பலனில் இருந்து தப்பிக்க செவ்வாய் தோஷம் உள்ள
பெண்களுக்கு செப்பு அல்லது வெள்ளி யில் மாங்கல்யம் தயாரித்து கொள்ளவும் .வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன்பு மஞ்சள் கயிற்றில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் போடா வேண்டும்

அது செவ்வாய் முழுவதும் கழுத்தில் இருக்க வேண்டும் .மறு நாள் காலையில் நீராடி விட்டு நெற்றில் குங்குமத்தை வைத்து தெய்வத்தை வணங்கி விட்டு மாங்கல்யத்தை கழட்டி எதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் சேர்ப்பித்து விடவும் .சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்யவும் .இவ்விதம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்




தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆடவனை திருமணம் செய்து வைக்கக் கூறுகிறோம்.

திருமணம் என்பது என்ன வென்றால் ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும். இதில் தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது .

எனவே, இதுபோன்ற முரண்பாடுகள் உருவாவது எதில் என்றுஆராய்ந்து  பார்த்தால், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் தருணங்களில் இது அதிகளவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வலியுறுத்துகிறோம்.

இதேபோல் அறிவியல் ரீதியாக பார்க்கும் போது ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்.







<
sevvai dosham scientific reason-sevvai dosham porutham in tamil-sevai thosam blood group-clear chevvai dosham-chevvai dosham pariharam in tamil-chevvai dosham pariharam temple-sevai thosam exception-chevvai dosham tamil matrimony

chevvai dosham scientific reason-chevvai dosham wikipedia-can a girl with chevvai dosham marry a boy without chevvai dosham-sevai thosam marriage in tamil-sevvai dosham porutham-chevvai dosham matrimony-chevvai dosham pariharam in malayalam-chevvai dosham pariharam temp
le>

Monday 18 September 2017

பத்து பொருத்தங்கள் - நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி ?- -Tamil Marriage Match



















1) தினம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு.  பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:
பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்ச த்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:
நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங் குகளின் விளக்கம் கீழே உள்ளது.குதிரை – எருமை, யானை – சிங்கம், ஆடு – குரங்கு, பாம்பு – எலி, பசு – புலி, எலி – பூனை, கீரி – பாம்பு, மான் – நாய், ஆண் – பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:
பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண் ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:
பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதி க்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு. வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காண லாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):
நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ் ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக் கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல் லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்த முண் டு.

10) நாடி:

27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட் டுள்ளன

.1) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை,  மூலம்,       சதயம், பூரட்டாதி.
2) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
3 கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திரு வோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரி வில் இல்லாமல் வெவ்வேறு பிரி வில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.
எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திரு மணப்பொரு த்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிக ளையும் கவனிக்க வேண்டும்.

1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.
2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு – இந்த ஐந்தும் முக்கிய மானப் பொருத்தங்கள்.
3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்க ளும் உண்டு.
4) பெண், பிள்ளை இருவரு க்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந் தால் 10 பொருத்தங்களும் உண்டு.
இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் - tamil nakshatra porutham table

திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி?




திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தைதான் அத்தகை முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரப் பொருத்தத்தை நீங்களும் அறிந்து கொள்ள இதோ. . .
வ.எண்
ஆண் நட்சத்திரத்திற்கு
பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம்சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.
உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம் பாதம்சதயம்
23.
அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டைதிருவோணம், அனுஷம்
25.
மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.
உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.
ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

Wednesday 13 September 2017

கடன் தொல்லையும் அதில் இருந்து விடுபட வழியும்



லக்கினத்தையும் லக்கினாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்ததால் ஜாதகஸ்தான் வாழ்க்கை முழுவதும்
கடனாளி .

2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குரியவர் புத்தியில் கடன் பட வேண்டும்
11 க்குடையவர் திசையில்  6,8,12 க்குரியவர் புத்தியில் கடன் பட வேண்டும்
6,8,12 க்குரியவர் திசையில் கடன் பட வாய்ப்புகள் அதிகம்
சனியும் ,செவ்வாயும்,கேதுவும்  சேர்ந்து அதன் தசா புக்திகள் வரும்பொழுது கடன் படலாம் ..

ஏனென்றால் சனி ஒருவனின் ஒரு மனிதனின் பூர்வ ஜென்ம கர்ம்மாவின் பலனை தரக்கூடியது அதனுடன் செவ்வாயும் சேரும்
போழுது கொடிய வறுமை அவனை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்..இவர்களுடன் கேதுவும் சேரும் பொழுது கொடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க மனிதனை கடன் வாங்க தூண்டுகிறது

கடனில் இருந்து விடுபட 

அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் மேஷ லக்கினம் வரும் வேளையில் அல்லது அனுஷ நட்சத்திரம் விருட்சிக
லக்கினம் வரும் வேளையில் ( இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்லுவார்கள் )..நாம் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறோமோ அவரிடம் சிறு தொகையாவது குடுத்து விட வேண்டும் ..அப்படி குடுக்க ஆரம்பிக்கும்
பொழுது  நமக்கு பண வரவு அதிகமாகி காலப்போக்கில் கடன் தொல்லை முற்றிலும் இல்லாமல் போகும்

                                                           - Article by tamil astrologer ( Tamil jothidam) Ragav

களத்திர தோஷமும் புத்திர தோஷமும்




மலடு
ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகம் நீசனாகி 6,8,12 களில் மறைந்தால் அவரின் துணை மலடாவார்
அதேபோல் ஐந்தாம் வீட்டில் புதனும் கேதுவும் இருந்தாலும் துணைக்கு மலட்டு தன்மை வருவதற்கான வாய்ப்பு
உள்ளது .இது எந்த லக்கினத்திற்கும் பொருந்தும் .அதேநேரம் இவர்களை குருவோ சுக்கிரனோ பார்த்தாலோ 
விதி விலக்கு உண்டு .அதுபோல் ஐந்தாம் வீட்டுக்குரியவர் நீசனாகி ஐந்தாம் வீட்டில் புதனும் சனியும் இருந்தால் துணைக்கு மலட்டு தன்மை இருக்கும்
விதவை
ஏழாம் இடத்தில செவ்வாய் சூரியன் சேர்க்கை விதவை
மூன்று அசுப கிரகங்கள் ஏழாம் வீட்டில் அமைத்தல் விதவை கோலம் தரும்
எட்டாம் இடத்தில செவ்வாய் சனி ராகு கேது அமைவது விதவையாக்கும்
பனிரெண்டாம் இடத்தில குருவோடு சந்திரன் சேர்க்கை மறு விவாகம் உண்டு -
Tamil astrology (Jothidam)

 
jothidam karka tamil pdf,jothidam karka pdf,jothidam karpom,jothidam padam,tamil jothidam lessons pdf-jothidam karka in tamil youtube,jothidam parpathu eppadi,tamil jothidam blogspot- thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for- marriage tamil jothidam online-tamil jothidam 2017-best jothidam in tamil language-tamil jothidam free software download-jothidam tamil books dinakaran jothidam-tamil jothidam marriage-dinamani jothidamin tamil

Copyright @ 2017 Vidwans web creations.